என்னை பிஹாரி என்கிற பொறுக்கிகளுக்கு தமிழ் தெரியாது..! யாரை சொல்கிறார் H.ராஜா தெரியுமா.?

0
Follow on Google News

பிரபல பத்திரிகையாளர் ரங்காராஜ் பாண்டே மற்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இருவரும் எத்தனை வருடம் தமிழகத்தில் இருந்தாலும் அவர்கள் அவர்கள் தமிழர் கிடையாது, பிஹாரி தான் என நிதி அமைச்சர் PTR தியாகராஜன் பேசிய வீடியோ ஓன்று சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது , அதில் மேலும் அவர் கூறியதாவது, இனம் என்றால் ரத்தத்தின் டிஎன்ஏ வில் என்ன இருக்கிறது அதை வைத்து தான் முடிவு செய்ய முடியும்.

நாம் என்ன இனம் என்று நாமே தேர்வு செய்ய முடியாது, நம் விருப்பத்தின்படி இனம் இருப்பதில்லை, எந்த அப்பா அம்மாவுக்கு நாம் பிறக்கின்றோமே அதை வைத்தே நம்முடைய இனம் முடிவு செய்யப்படுகிறது, இனம் என்பது நம்முடைய ரத்தத்தில் டிஎன்ஏ வில் இருக்கு, இனம் என்பது என்றைக்குமே மாறவே முடியாது. அதனால் தான் நாம் சொல்கின்றோம் சுந்தர் பிச்சை தமிழர், ஏனென்றால் பிறப்பில் அவர் தமிழர் அதனால் எத்தனை வருடம் அமெரிக்காவில் அவர் இருந்தாலும் சுந்தர் பிச்சை தமிழர்.

எத்தனை தலைமுறை அவர்கள் குழந்தை பிறந்தாலும் அவர்கள் தமிழர் ஆனால் அவர்கள் குடியுரிமையில் அமெரிக்கா, அதேபோன்று இந்திரா நோயர் தமிழர், ஏனென்றால் அவர் இங்கே பிறந்த இனம் தமிழர் என்பதால் அவர் இங்கே இருந்தாலும் இல்லை என்றாலும் அமெரிக்காவில் இருந்தாலும் தமிழர், இது மாறவே முடியாது, அதே போன்று எங்கே இருந்தாலும் நான் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த தமிழன், அமெரிக்காவில் 20 வருடம் இருந்தேன் கிரீன் கார்டு வாங்கி இருந்தேன், ஆனால் சிட்டிசன் சிப் மாற்றவில்லை, அமெரிக்காவில் இருக்கும் போதும் தமிழன் தானே.

20 வருடம் கழித்து திரும்ப ஐந்து வருடம் சிங்கப்பூரில் இருந்தேன், சிங்கப்பூரில் இருந்தாலும் நான் தமிழன் தானே, மீண்டும் சென்னை வந்தேன் மதுரையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு இன்றைக்கும் நான் தமிழன் தான், அதனால் பிறக்கின்ற ஒரு இனத்தை தாய் தகப்பனை வைத்துதான் அவர்களின் இனத்தை சொல்ல முடியும். அதில் மாற்றவே முடியாது அந்த அடிப்படையில் நான் சொல்கின்றேன் எத்தனை தலை முறை தமிழ்நாட்டில் இருந்தாலும் ரங்கராஜ் பாண்டே பிகாரி பிகாரி தான்.

ரங்கராஜ் பண்டே குழந்தையும் பேரனும் பிகாரி தான் அதே போன்று ஹெச். ராஜா பீகார் தான். எந்த அளவுக்கு சுந்தர் பிச்சை தமிழர் என்பது உண்மையோ, அதை அளவுக்கு ஹெச். ராஜாவும், ரங்கராஜ் பாண்டேவும் பிகாரி தான். இனம் என்பது பிறப்பிலிருந்து சாகும்வரை மாறவே மாறாது உங்களுக்கு வரும் அடுத்த தலைமுறையும் மாற்ற முடியாது என PTR தியாகராஜன் பேசிய வீடியோ ஓன்று சமூக வலைதளத்தில் வைரலாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது பாஜக மூத்த தலைவர் H.ராஜா குறித்து நெல்லை கண்ணன் பேசிய சர்ச்சை கூறிய பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் பேசுகையில், இடையில் எத்தனையோ பொறுக்கிஸ் என்னை பிஹாரி என்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு தமிழ் கூட தெரியாது என H.ராஜா யாருடைய பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக பேசியது, சமீபத்தில் H.ராஜா குறித்து PTR பழனிவேல் தியாகராஜன் பேசியதற்கு மறைமுகமாக பதிலளித்துள்ளாரா H.ராஜா என குழப்பம் தமிழக அரசியலில் நீடித்து வருகிறது குறிப்பிடதக்கது.