இயக்குனர் செல்வராகவனின் புதிய படைப்புடன்… “நெஞ்சம் மறப்பதில்லை”…!

0
Follow on Google News

பல தடைகளை உடைத்து வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை இயக்குனர் செல்வராகவனின் புதிய படைப்புடன் இன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. எஸ் ஜே சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கேஸ்சன்றா போன்றவர்கள் நடித்துள்ள “நெஞ்சம் மறப்பதில்லை”. இயக்குனர் செல்வராகவன் இயக்கியுள்ளார்.

இவர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் வரலாற்று திரைப்படம். இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இவருக்கென தனி ரசிகர்கள் உருவாக்கினார். சில மாதங்களுக்கு முன்பு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தனுஷ் நடிப்பில் வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

வரலாறு காதை, காதல் கதை, கேங்ஸ்டார் கதை போன்ற கதை அம்சங்களை இயக்கி வந்த செல்வராகவன் தற்போது முதல்முறையாக ஹாரர் பக்கம் திரும்பியுள்ளார். இவர் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை என்று ஹாரர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியது. ரசிகர்களின் நல் வரவேற்பை பெற்றது.

நடிகர் எஸ்.ஜே. சூர்யா தன்னுடைய நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார். இன்று இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் செல்வராகவனின் படைப்பையும், எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பையும், யுவன்சங்கர் ராஜாவின் இசையையும் பாராட்டி வருகின்றனர். திரையரங்கை மிரட்டி வரும் செல்வராகவனின் புதிய படைப்புக்கு வாழ்த்துக்கள்.