மாநாடு கடைசி நேரத் தடங்கல்… விஜய் டி வி செய்த குழப்பம்தான் காரணமா?

0
Follow on Google News

சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் பல தடைகளை தாண்டி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா மற்றும் எஸ் ஏ சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட இந்த படம் பல பிரச்சனைகளைத் தாண்டி இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்று திடீரென நாளைப் படம் வெளியாகவில்லை என அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இது சம்மந்தமாக என்ன காரணம் என்பதையும் அறிவிக்கவில்லை. இதனால் படத்துக்காக முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.

இதற்கிடையில் திரும்ப நள்ளிரவின் போது படம் நாளை ரிலீஸ் ஆகும் என அறிவித்தனர். இப்படி மாறி மாறி அறிவிப்புகள் வெளியானதால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். ஒருவழியாக நேற்று காலை 8 மணிக் காட்சி முதல் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இந்நிலையில் கடைசி நேர சிக்கல் மற்றும் குழப்பங்களுக்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

படத்தின் தொலைக்காட்சி உரிமையை பெரிய தொகைக்கு வாங்கிக் கொள்வதாக உறுதி அளித்திருந்த விஜய் தொலைக்காட்சி நிறுவனம் கடைசி நேரத்தில் பின் வாங்கிவிட்டதாம். அந்த தொகையை பைனான்சியருக்கு திருப்பிக் கொடுக்க முடியாமல் சிக்கல் எழவே கடைசி நேரத்தில் சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் சாட்டிலைட் உரிமையை வாங்கிக் கொண்டு தொகையை கொடுத்துள்ளாராம்.