போதையில் முத்துவிடம் உளறிய கறிக்கடைக்காரர்… சிறகடிக்க ஆசையில் வசமாக சிக்கிய ரோகினி

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் சிறகடிக்க ஆசை. நிறைய புதுமுக நடிகர்களுடன் தொடங்கப்பட்ட இந்த தொடர் விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பொங்கலை கொண்டாட குடும்பமாக அண்ணாமலை தனது சொந்த ஊருக்கு குடுமபத்துடன் சென்றுள்ளார். அங்கு ரோஹினியின் மாமா வர ஒரே அமர்க்களமாக இருந்து வருகிறது சிறகடிக்க ஆசை.

ரோகினி அவருடைய மாமாவாக நடிக்க செட்டப் செய்த கறிக்கடைக்காரர் வந்து இறங்கியதும், விஜயவை கையில் பிடிக்க முடியவில்லை, ஆனால் தொடர்ந்து கறிக்கடைக்காரர் நடவடிக்கைகள் விஜயா தவிர மற்ற அனைவருக்கும் சந்தேகம் வரும் அளவுக்கு உள்ளது. வீட்டின் உள்ளே நுழைந்ததும் இது ரொம்ப பழைய வீடா இருக்கும் போல இருக்கே என்கிறார் கறிக்கடைக்காரர். அதற்கு விஜயா, ”இதை சீக்கிரமே இடிச்சிட்டு புது வீடு கட்டணும்” என்கிறார்.

சிங்கப்பூர்ல நான் இருந்த வீடு கூட என கறிக்கடைக்காரர் பேசும் போது, நீங்க மலேசியாவில் தான இருக்கீங்க என அங்கிருந்தவர்கள் சந்தேகத்துடன் கேள்வி எழுப்ப, உடனே ரோகினி எதோ பேசி சமாளித்து விடுகிறார்.ரோகினி அப்பா மாப்பிளைக்கு சீர் செய்ய ட்ரஸ் எல்லாம் வாங்கி கொடுத்ததாக கூறி புது துணிகளை கொடுக்கின்றார். ரோகிணியின் அப்பா மாப்பிளைக்கு ஆம்லேட் போட சொன்னதாக கறிக்கடைக்காரர் சொல்லும் போது, வீட்டில் உள்ள அனைவரும் திருதிருவென விழிக்கின்றனர்.

அதாவது பிரேஸ்லெட்டை தான் சொல்ல தெரியாமல் ஆம்லேட் என சொல்லுகிறார் கறிக்கடைக்காரர். கடைசியில் அதையும் ஒரு வழியாக ரோகினி சமாளித்து விடுகிறார். இதனை தொடர்ந்து ஸ்ருதி நீங்க மலேசியாவில் எங்க இருக்கிறீங்க என்னுடைய பிரண்டும் மலேசியாவில் தான் இருக்கா என்ற பிரண்டும் இருக்கிற இடத்தை குறிப்பிட்டு கறிக்கடை காரரிடம் கேட்கிறார்.

அதற்கு கறிக்கடைக்காரர் இந்த சமாளிக்க முடியாமல் சமாளிக்க அங்கே இருகிறர்வர்களுக்கு சந்தேகம் வருகிறது. முத்து இளநீர் வெட்டுவதற்காக அருவாவை கேட்க அப்போது மீனா அருவா எடுத்துக்கொண்டு கொடுக்கிறார். ஆனால் அந்த கத்தி ஷார்ப்பாக இல்லையே என்று முத்து சொல்லிக் கொண்டிருக்க அதற்கு கறிக்கடைக்காரர் கத்தியை சாணை பிடிக்கணும் என்று சொன்னதும் என்னடா இது மலேசியா ஸ்லாங் மாதிரி இல்லையே என முத்துவுக்கு சந்தேகம் வருகிறது.

முத்துவும் செல்வமும் இவரை பார்த்தா மலேசியாவில் இருந்து வந்த மாதிரியே இல்லை. இவரை குடிக்க வச்சாதான் இவர்கிட்ட இருந்து உண்மையை வாங்கணும் என்று பிளான் போடுகின்றனர். பிறகு விஜயா, ரோகினி ஸ்ருதியோடு காய்கறி வெட்டிக் கொண்டிருப்பதை பார்த்த கறிக்கடைக்காரர், இப்படி வெட்டிட்டு இருந்தா நாளைக்கு தான் சமைப்பீங்க போல, கொடுங்க நான் வெட்டுறேன் நம்ம வீட்டு வேலையை நாம தானே செய்யணும் என கத்தியை தீட்டி சரசரவென வெட்டி தள்ளுகிறார்.

இதை எல்லாரும் பார்த்து இவர் என்ன கறிக்கடையில் கொத்துக்கறி போடுற மாதிரி பண்ணுறாரே என சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். இனி வரும் நாட்களில் கரைக்கடைக்காரரை தண்ணி அடிக்க வைத்து அவர் உண்மையிலே யார் என்பதை அவர் வாயிலே இருந்து வாங்கி விடவேண்டும் என முத்துவும் அவருடைய நண்பர் செல்வமும் போடும் திட்டத்தின் படி கறிக்கடைக்காரருக்கு சரக்கு வாங்கி ஊத்தி விடுகிறார்கள்,

கறிக்கடைக்காரர் போதையில் மிதக்க இவர்கள் உண்மையை போட்டு வாங்கியதில், இவர் மலேசியாவில் இருந்து வரவில்லை, கறிக்கடையில் இருந்து வந்திருக்கிறார் என்பதை கண்டு பிடித்து விடுகிறார்கள். இதன் பின்பு தான் அடுத்தது பரபப்புடன் சிறகடிக்க ஆசை சீரியல் நகர இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.