இதுக்கு மேல என்னை நீ ஏமாற்ற முடியாது… ரோகிணியை இறக்கி பிடித்த விஜயா… செம்ம ட்விஸ்டல் சிறகடிக்க ஆசை…

0
Follow on Google News

தாலி பிரித்து போடும் நிகழ்ச்சியில் நடந்த பிரச்சனையில், ஸ்ருதி, வீட்டிற்கு வரமாட்டேன் என்று அம்மா வீட்டிற்கு செல்கிறார். கோபத்தில் விஜயா வீட்டில் ஆர்ப்பாட்டம் செய்கிறார். பின் ஸ்ருதி- ரவியை வர வைக்க வீட்டில் உள்ள எல்லோருமே போன் செய்து பேசுகிறார்கள். ஆனால், வர முடியாது என்று சுருதி மறுத்து விடுகிறார். மீனா, சுருதியை சந்தித்து பேசுகிறார். ஸ்ருதி, மீனாவிடம் கோபம் காட்டுகிறார்.

இருந்தாலும் மீனா கோபப்படாமல் ஃபங்ஷனில் நடந்த எல்லா உண்மையும் சொல்கிறார். இதைக் கேட்டு ஸ்ருதி அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் ஸ்ருதி ஸ்ருதியிடம் சண்டை போட்டு வீட்டுக்கு செல்லாமல் ஹோட்டலில் தங்கி இருப்பது முத்துவுக்கு தெரிகிறது. இதனால் ரவியை முத்து வீட்டிற்கு கூப்பிடுகிறார். ஆனால், ஸ்ருதி வந்தால் தான் வருவேன் என்று ரவி மறுக்கிறார்.

இன்னொரு பக்கம் ஸ்ருதி- ரவி வராததை நினைத்து விஜயா வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். பின் ஸ்ருதி- ரவி வந்தால் தான் சாப்பிடுவேன் என்று விஜயா அடம்பிடுகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே எவ்வளவு சொல்லியும் விஜயா சாப்பிட மறுக்கிறார். இதனால் ரோகினியும் வேற வழியில்லாமல் நானும் சாப்பிட மாட்டேன் என்று வழியில்லாமல் கட்டாயப்படுத்தி நிற்க வைக்கிறார்.

இந்நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்தடுத்து என்ன என்பது தற்பொழுது கசிந்துள்ளது, அதில் ரோகிணி எங்க அப்பா வருவாரு, வருவாரு என சொல்லி விஜயாவை ஏமாற்றிக் கொண்டிருந்க்க, இதனால் கடுப்பான விஜயா உனக்கு அப்பா இருக்காரா இல்லையா, இல்ல காதுல பூ சுத்துறியா என கேட்கிறார்.

அதற்கு ரோகிணி இல்ல ஆன்ட்டி எங்க அப்பா ஏன் வரலைன்னு எனக்கே தெரியல எனக் கூற, கோபமான விஜயா, உங்க அப்பா என்ன மலேசியா நாட்டுக்கு அதிபதியா, வரேன் வரேன்னு சொல்லிட்டு வராம இருக்க, என்ன கோபப்படுத்தி பார்க்காத, உங்க அப்பா வரலைன்னா, உனக்கான இடம் இந்த வீட்டில எதுன்னு நா தான் முடிவு பண்ணனும் என கோபமாக சொல்கிறார். உடனே ரோகிணி அழுகிறார்.

இந்த அழுது நீலிக்கனி வடிச்சதெல்லாம் போதும், இனிமேலும் இந்த கதையை நான் நம்ப மாட்டேன் என விஜயா திட்ட வட்டமாக சொல்கிறார்.இதனால் ரோகிணி என்ன சொல்லியும் இனி தப்பிக்க முடியாது என்கிற சூழலுக்கு தள்ளப்படுகிறார். இந்த நிலையில் ரோகினி அவருடைய மலேசியா அப்பாவை இங்கே வரவளைத்தே ஆக வேண்டும், இல்லையென்றால் அடுத்தடுத்து விஜயாவின் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறார்.

குறிப்பாக முத்து – மீனா முன்பாகவே ரோஹிணியை அவமரியாதையாக நடத்த தொடங்குகிறார். இதனை தொடர்ந்து ரோகினி அவருடைய தோழியிடம் ஐடியா கேட்க அதற்கு, ஒரு நபரை செட் செய்து மலேசியாவில் இருந்து போனில் பேச வைப்பது போன்று பேசவைக்கலாம் என திட்டமிடுகிறார்கள். இதனை தொடர்ந்து ஒரு நபரை செட் செய்து மலேசியாவில் இருந்து போனில் பேச வைக்கிறார்கள், ரோகிணியும் என்னுடைய அப்பா பேசுகிறார் என மாமியாரிடம் போனை கொடுத்து பேச வைக்கிறார்.

போனில் பேசும் செட்டப் அப்பா, என் பொண்ண நல்லா பார்த்துக்கோங்க, இங்க நான் ரெம்ப பிசியாக இருக்கிறேன், சீக்கிரம் வரேன், வந்து உங்களை பார்க்கிறேன் என்று சொல்கிறார், இதன் பின்பு கொஞ்சம் கூல் அகிறாராம் விஜயா, இருந்தும் அந்த போனில் பேசியது ரோகினி அப்பா கிடையாது என சந்தேகத்தை கிளப்பும் வகையில் முத்து துருவி துருவி கேள்வி கேட்டு விஜயாவை ரோகிணிக்கு எதிராக தூண்டி விடும் காட்சிகள் இனி வரும் நாட்களில் ஒளிபரப்பாக இருக்கிறது.