SJ சூர்யா வேண்டாம்… அரவிந்த்சாமி ஓகே… ரஜினிகாந்த் புதிய படத்தின் சுட சுட அப்டேட்..!

0
Follow on Google News

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்தே திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. கொரோனா தொற்றின் காரணமாக சுமார் 2 வருட தாமதத்திற்கு பின்பு வெளியான அண்ணாத்தே திரைப்படத்தின் நஷ்டத்தை சரி செய்ய அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்க கால் சீட் கொடுத்தார் ரஜினிகாந்த்.

இந்த படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது. நெல்சன் இயக்கத்தில் வெளியான கடைசி படம் பீஸ்ட் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்த. ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் இருந்து இயக்குனர் மாற்றப்படலாம் என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில். ஒரு கட்டத்தில் நெல்சன் மீது உள்ள நம்பிக்கையில் தன்னுடைய புதிய படத்தின் இயக்குனர் வாய்ப்பை கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ரஜினிகாந்த் அல்லாத மற்றவர்கள் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு ரஜினி நடிக்கும் அடுத்த புதிய படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் கதையை ஓகே செய்த ரஜினிகாந்த் படத்திற்கான முழு ஸ்கிரிப்ட் தயார் செய்ய அறிவுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணி மற்றும் மற்ற நடிகர்கள் தேர்வில் பிஸியாக இருக்கிறார் சிபி சக்கரவர்த்தி. இஇதனை தொடர்ந்து ரஜினிகாந்த் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிகர் அரவிந்த்சாமி கமிட்டாகி உள்ளதாக செய்திகள் வெளியாகிறது.

இந்த படத்தில் SJ சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதற்கான வாய்ப்பு இல்லை என்று உறுதிப்படுத்தபட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஏற்கனவே தளபதி படத்தில் ரஜினியின் தம்பியாக அரவிந்த்சாமி நடித்துள்ள நிலையில், மேலும் சமீபத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கும் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருவதால் ரஜினிகாந்த் நடிக்கும் சிபி சக்கரவர்த்தி படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.