பிரபல நடிகையுடன் இரண்டாவது திருமணத்துக்கு தயாரான ரஜினிகாந்த்…! மனைவி லதா என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

பெங்களுரில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வந்த சிவாஜி ராவ் சினிமா மீது உள்ள மோகத்தில் மெட்ராஸ் பிலிம் இண்டஸ்ட்ரியில் நண்பர் ராஜ் பகதூர் உதவியுடன் படித்தார், பின்னர் இயக்குனர் இமையம் கே.பாலசந்தர் பார்வையில் சிவாஜி ராவ் தென்பட ரஜினிகாந்த் என பெயர் மாற்றப்பட்டு 1975ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டு அடுத்த சில வருடங்களில் சினிமாவில் முக்கிய கதாநாயகனாக வலம் வந்தார்.

80 காலகட்டத்தில் முன்னணி நடிகையான லதாவை ரஜினிகாந்த் காதலிப்பதாக கிசு கிசு வந்தது, இது அப்போதைய முதல்வராக இருந்த எம்ஜிஆர் க்கு பிடிக்காத காரணத்தினால் நடிகர் ரஜினிகாந்த் கடும் நெருக்கடிக்கு ஆளாகி பின் அந்த காதல் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தனது 31 வயதில் தனது முன்னால் காதலியின் பெயர் கொண்ட பின்னணி பாடகியாக இருந்த லதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரஜினிகாந்த்,

இவர்களுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரண்டு குழந்தைகள் பிறந்து இல்லற வாழ்கை சுமூகமாக சென்று கொண்டிருந்த நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஒரு கட்டத்தில் குடும்பத்தை முழுமையாக வெறுக்கும் நிலைக்கு வந்த ரஜினிகாந்த் அந்த கால கட்டத்தில் தான் ராகவேந்திரா படத்தில் நடித்து வந்துள்ளார். ராகவேந்திரா படத்தை முடித்த பின்பு வேலைக்காரன் படத்தில் முதல் முதலில் நடிகை அமலா உடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

அப்போது “வேலைக்காரன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்த போது ரஜினிகாந்த் மற்றும் அமலா இருவரும் நெருங்கி பழக தொடங்கியுள்ளனர், அப்போது நடிகை அமலாவின் பர்சனல் லைப் பத்தி கேட்ட ரஜினி, தன்னோட வாழ்க்கைல நடந்ததையெல்லாம் அமலாவிடம் எடுத்து கூறியுள்ளார், இதன் பின்பு நடிகை அமலாவுடன் நெருக்கமான ரஜினிகாந்த் கொடி பறக்குது, மாப்பிள்ளை என தொடர்ந்து அமலாவுடன் ஜோடி சேர்ந்த ரஜினிகாந்த் தன்னுடைய படம் இல்லாமல் வேறு ஒருவர் படத்தில் அமலா நடிக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று சந்தித்து விடுவாராம்.

அந்த கால கட்டத்தில் நடிகை அமலா உடன் காதல் கிசு கிசுக்கப்பட்ட ரஜினிகாந்த் சிங்கப்பூருக்கு அடிக்கடி அமலாவுடன் செல்வதாக பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது குடும்பத்தை விட்டு பிரிந்து காலம் தனியாக வாழ்ந்து வந்த ரஜினிகாந்த், அவருடைய மனைவி லதாவை விவாகரத்து செய்ய முடிவு செய்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்து வரும் ரஜினிகாந்த் சில நாட்களில் குடும்பத்துடன் இணைந்து விடுவார் என எதிர்பார்த்து காத்திருந்த லதா விவாகரத்து நோட்டீசை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்

உடனே ரஜினிகாந்த் குருநாதர் இயக்குனர் பாலச்சந்தரை நேரில் சந்தித்து நடந்ததை தெரிவித்து கண்ணீர்விட்டு அழுதுள்ளார் லதா, இதன் பின்பு ரஜினிகாந்தை நேரில் அழைத்து பேசிய இயக்குனர் பாலச்சந்தர், உன்னுடைய இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து பார்,தற்போது சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நீ, விவாகரத்து செய்தால் பெண்கள் மத்தியில் உனக்கு ஆதரவு கிடைக்காது, பின் சினிமாவிலும் தோல்வியை சந்திக்க நேரிடும் என பாலசந்தர் அறிவுரையை ஏற்று மீண்டும் குடும்பத்துடன் இணைந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த், இந்த விவகாரம் வருடங்கள் பல கடந்து தற்போது வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.