ஒரே ஒரு பாடல் மொத்த படமும் குளோஸ்…லைக்கா திவால் தான்… யாரை ஏமாற்றுகிறார் மணிரத்தினம்..!

0
Follow on Google News

பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, தமிழரின் வரலாற்றை உலகம் அறிய செய்ய இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டு இதற்கு முன்பு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தை மிஞ்சும் வகையில் இந்த படம் இருக்கும் என்று ஓவர் பில்டப் கொடுத்து மணிரத்தினம் இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள படம் பொன்னியின் செல்வன். இந்த படம் லைக்கா தயாரிப்பில் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

பேன் இந்தியா படம் என விளம்பரம் செய்யப்பட்டாலும், பேன் இந்தியா ஸ்டார் யாரும் இந்த படத்தில் நடிக்காததால் பிற மொழி ரசிகர்களுக்கு இப்படி ஒரு படம் எடுக்கப்பட்டுள்ளது கூட தெரியவில்லை. இந்த படத்திற்கு கொடுக்கப்பட்ட பில்டப்பை நம்பி மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.

இதுக்கு தான் 500 கோடி செலவு பண்ணினார் என்று மக்கள் கிண்டல் செய்யும் வகையில் அமைத்து பொன்னியின் செல்வன் டீசர். தொடர்ந்து அடுத்தடுத்து இந்த படத்திற்கான ப்ரோமோஷனில் மணிரத்தினம் ஈடுபட்டாலும் எதிர்பார்த்த வரவேற்பு மக்கள் மத்தியில் இல்லை. மேலும் இந்த படத்தில் நடித்த நடிகர் கார்த்திக் மற்றும் ஜெயம் ரவி தவிர்த்து மற்ற நடிகர் யாரும் பெரும்பாலும் பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொல்வதில்லை.

இந்த படத்தில் நடித்த நடிகர் விக்ரம், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பொன்னியின் செல்வன் தொடர்பான எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருவது, அவர்களுக்கே இந்த படம் வெற்றி பெரும் என்கிற நம்பிக்கை இல்லை என்றே கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற பொன்னின் நதியே என்கின்ற பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

பாகுபலி படத்தில் மகில்மதியை அறிமுகப்படுத்தும் பாடல் ஒன்று இடம்பெற்றிருக்கும், அந்தப் பாடலைக் கேட்டாலே அந்த நகரின் பிரம்மாண்டத்தை உணர முடியும். சோழமண்டலம் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் பூமியாகும், அங்கே கரிசல் நிலம் கிடையாது, ஆனால் பாடல் வரிகளில் கரிசல் கடந்து என்றோ, கரிசல் தாண்டி என்றோ, பாடல் வரிகள் உள்ளது.

இது கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைப் படித்து, உயிரோடு உயிராய் ஒன்றியவர்கள் எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பாட்டு படி இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான் மற்றும் படம் எடுத்த மணிரத்தினம் இருவரும் மறந்துவிட்டனர் என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள், மேலும் எதோ ஒரு கதையை படமாக்கிவிட்டு, இது தான் பொன்னியின் செல்வன் என யாரை ஏமாற்றுகிறார் என கண்டன குரலும் எழுந்துள்ளது. இந்த படத்தை தயாரிதை லைக்கா இத்துடன் திவாலாகவும் வாய்ப்புள்ளது என்கிறது சினிமா வட்டாரம்.

நீ ..யாராக இருந்தா என்ன.. ஷங்கரை விரட்டியடித்த பெண் அதிகாரி.. உடனே இடத்தை காலி செய்..