சின்மயி வசமிருக்கு வைரமுத்து குறித்த தொலைபேசி ஆதாரம்.!என்ன பேசப்பட்டுள்ளது தெரியுமா.? இந்த முறை வைரமுத்து தப்பிக்கவே முடியாது…

0
Follow on Google News

தமிழ் சினிமாவின் படலாசிரியர்களில் கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி வரிசையில் அடுத்து அவர் தான் என்கிற அளவுக்கு முக உச்சத்தில் இருந்தவர் கவிஞர் வைரமுத்து. கணக்கில் அடங்காத எண்ணற்ற பாடல்களை தமிழ் சினிமாவில் எழுதிய வைரமுத்து தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்றவர். இப்படி படலாசியர் வைரமுத்து என்று மட்டுமே தெறித்த உலக தமிழர்களுக்கு வைரமுத்துவின் வேறு ஒரு முகம் என்ன என்பதை வெளிச்சம் போட்டு காண்பித்தவர் பின்னனி பாடகி சின்மயி.

வைரமுத்து ஒரு அரசியல் கட்சி சார்ந்தவராக இருந்தாலும் மக்கள் மத்தியில் எந்த அரசியல் மாற்றும் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் வந்தவர். முதல் முதலாக இந்துக்களில் மனம் புண்படும்படி ஆண்டாள் குறித்து பேசி இந்துக்கள் மத்தியில் கடும் எதிப்புக்கு உள்ளானவர். அடுத்த ஒரு வருடத்தில் பாலியல் புகாரில் சிக்கி சின்னாபின்னமானார்.வைரமுத்து குறித்த பாலியல் புகாரை பொது வெளிக்கு கொண்டு வந்த சின்மயி அவரால் எப்படியெல்லாம் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானார்கள் என்பதையும் வெளியிட்டார்.

இதன் பின்பு வைரமுத்துவின் மரியாதை மொத்தமும் காலியானது. இந்நிலையில் சில காலம் சற்று அமைதியாக இருந்த சின்மயி மீண்டும் வைரமுத்து விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். வைரமுத்து மேல் நீங்க பதிவு செய்த வழக்கு தற்போது என்ன நிலையில் உள்ளது என வலைதளவாசி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சின்மயி. அது குறித்து ஒரு மண்ணும் தெரியாது. தெரிய வாய்ப்பும் இல்லை என தெரிவித்தவர் அடுத்து சில அதிர்ச்சியளிக்கும் விஷயத்தை வெளியிட்டுள்ளார்.

அதாவது, இன்னும் சில நாட்கள் பார்த்துவிட்டு பிறகு தான் ரெகார்ட் செய்து வைத்துள்ள தொலைபேசி உரையாடல்கள் அனைத்தையும் மீடியாவில் வெளியிட வேண்டுமா என யோசிக்க வேண்டும். ஆனால் அந்த தொலைபேசி உரையாடலில் இது வரை வெளியில் வெளிவராத பெண்களில் பல பெயர் அடிபடும், அதனால் தான் வாயை மூடிட்டு இருக்கேன் என தெரிவித்தவர், வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி மற்றும் அவரது மருமகள் மதன் கார்க்கி மனைவி தொலைபேசி உரையாடல் கூட என்னால் வெளியிட முடியும் என்றும்.

இதில் சோகமான ஓன்று என்ன வென்றால் மதன் கார்க்கி, தனது தாயார் ஒரு லிஸ்டே வைத்துள்ளார் என்று சொன்னார், பின்பு அப்படி சொல்லவே இல்லை என பொய் வேறு. இவை அனைத்தையும் பத்திரிகையாளர்களிடம் காட்டியாச்சு. யாரும் எதுவும் பண்ண முடியாத நிலை. மலேசியாவை சேர்ந்த பெண் ஒருத்தர் பத்திரிகையாளர் ஒருவரிடம் வைரமுத்து தவறாக நடந்தது பற்றி எடுத்து செல்ல, அதை அந்த பத்திரிகையாளரும் பதிவு செய்துள்ளார்.

ஆனால், மிக முக்கிய போலீஸ் உயரதிகாரி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த பதிவை எடுக்க வலியுறுத்தியுள்ளார். அனைவர்க்கும் அனைத்தும் தெரியும், அனைவரிடம் ஏதோ ஒரு பெண் சொல்லியிருக்காங்க. அதுக்கும் மேல இவரை எதுவும் செய்ய முடியவில்லை என்றால். இவருடைய டீலிங் வேற லெவலில் இருக்கும் அவ்ளோதான். தமிழ் நாடு இவ்வளவு தான். இந்தியாவே இவ்வளவுதான் என சின்மயி தெரிவித்துள்ளார். ஆனால் விரைவில் தன்னிடம் உள்ள தொலைபேசி உரையாடல்களில் உள்ள பெண்களின் பெயர்களை மட்டும் ம்யூட் செய்து அந்த ஆடியோவை எந்த நேரமும் சின்மயி வெளியிடலாம் என கூறபடுகிறது.

யோவ் பாரதிராஜா.. எதுக்குய்யா இந்த மானங்கெட்ட பொழப்பு.!உச்சக்கட்ட அவமானத்தில் பாரதிராஜா..!