பொறுக்கிங்களுக்கான நாடு… பொத்தி பொத்தி பாதுகாக்கும் கூட்டு களவாணிகள்..! யாரை சொல்கிறார் சின்மயி தெரியுமா.?

0
Follow on Google News

பாதுகாப்பான இடம் தாயின் கருவறையும், கல்லறையும் தான் என கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் சின்மயி..அவர் தெரிவித்ததாவது, பொறுக்கிங்களுக்கான நாடு. பொறுக்கிங்கள மட்டும் காப்பாத்தும் நாடு, சமுதாயம், குடும்பம், கலாசாரம். எங்க கேட்டாலும் சொல்லுவேன்.

இந்த ஊரு பாலியல் குற்றவாளிகள காப்பாத்தி, உயிர் பிழைத்தவர்களை ஓட வாய பொத்தி, கதற அடிச்சு சோரு திங்கும் ஊரு. இன்னும் எத்தன நாள்தான் நல்லா இருப்பாய்ங்க அத்தன கூட்டு களவாணிகளும்? கூட்டு களவாணின்னா யாரயோ சொல்றேன்னு நினைக்க வேண்டாம். உங்க புழக்கடையும் பாத்துட்டு இந்த மாதிரி எத்தன ஆளுங்கள நீங்க பொத்தி பொத்தி பாதுகாக்கறீங்கன்னு தெரிஞ்சுக்கோங்க…

ஆனா அதுக்கு வெக்கம் சூடு மனசாட்சி முக்கியமா ரேப் கலாசாரத்தை பின்பற்றாத மக்களாக இருக்கணுமே. அது சரி வராது. நீங்க உங்க வேலைய பாருங்கமா. நான் உயிரோட இருந்து இன்னும் பேசிட்டு இருக்கேன்றது தான் இங்க வயத்தெரிச்சலே. நானும், குற்றம் சாட்டிய மத்த பெண்களும் இந்த மாதிரி லெட்டர் எழுதி வெச்சு செத்துர்ந்தாலும், அதே பாலியல் குற்றவாளிக்கு தீவிட்டி பிடிக்குற கேவலமான சாக்கடை தான் இது.

விருது வழங்கி முடி சூட்டி அழகுபாக்கும் சாக்கடை. என்னைபோல் பல பெண்கள், ஆண்கள் மாற்றுப்பாலின மக்கள் இருக்காங்க. ஊர்ல யோக்கியன் வேடம் போட்டுட்டு எவன ரேப் பண்ணலாம்னு சுத்தும் பாலியல் குற்றவாளிகளுக்கும் அவர்களுக்கு துணை போகும் மக்கள்தான் அதிகம். இல்லைன்னா எனக்கெதுக்கு வம்பு? அப்டீன்னு கண்டும் காணாத மாதிரி கண் முன்னாலையே ரேப் நடந்தாலும் பாக்காம போயிட்டு,

அவ ஏன் தனியா லேட்டா வந்தான்னு கேக்குற ரேபிஸ்ட்டுக்கு துணை போகும் பழமையான, பாரம்பரியமான சமுதாயம். அவனுங்கலாம் நல்லாவே இருக்கானுங்க. கடைசி வரைக்கும் யாரயாச்சும் டார்ச்சர் பண்ணிட்டுதான் போவானுங்க. சொத்துகாக எதுக்கு வேணாலும் துணைபோகும் பாலியல் குற்றவாளிகளின் குடும்பங்கள். இவ்வளவு தான் இந்த கலாசாரம். இந்த கருத்து பிடிக்காட்டா குட்டிசெவுத்துல முட்டிக்கோங்க.

இன்னிக்கு இன்னுமொரு பெண் குழந்தையோட உயிர் போயிருக்கு. ஒரு (or in this case based on the letter alone) பல பாலியல் குற்றவாளிகள் அவனுங்க வேலைய பண்ணிட்டே தான் இருக்கானுங்க. இந்த எழவெடுத்த கலாசாரம் பாலியல் குற்றம் நடந்தா எங்க தப்பு, எங்க குடும்ப மானம் போகும்னு ஊட்டி வளக்குது. போங்கடா நீங்களும் உங்க கேவல ரேப் கல்சரும் என சின்மயி யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் தனது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் மறைமுகமாக பாடலாசிரியர் வைரமுத்துவை தான் சுட்டி காட்டியுள்ளார் என கூறப்படுகிறது.