ஜோதிகா பெயர் நீக்கம்… என்னாச்சு சூர்யா – ஜோதிகா தம்பதியினருக்கு … என்ன பிரச்சனை தெரியுமா.?

0
Follow on Google News

சூர்யா ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் காதலுக்கு ஆரம்பத்தில் சூர்யா தந்தை நடிகர் சிவகுமார் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். இருந்தும் இவர்கள் தங்களின் காதலில் உறுதியாக இருந்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். சூர்யா குடும்பத்தினர் விருப்பத்தை ஏற்று திருமணத்துக்கு பின்பு ஜோதிகா சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

பின்பு நீண்ட இடைவேளைக்கு பின்பு 36 வயதினிலே படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் நடிக்க தொடங்கினார் ஜோதிகா. ஆனால் மாமனார் சிவகுமாருக்கு மீண்டும் ஜோதிகா சினிமாவில் நடிப்பதில் விருப்பமில்லை என கூறப்பட்டது. இருந்தும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஜோதிகா, அவருடைய சில பேச்சுக்களால் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார்.

இந்நிலையில் 2டி தயாரிப்பு என்கின்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து உருவாக்கி பல படங்களை தயாரித்து வந்தனர். இவர்கள் தயாரிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்திய படம் ஜெய் பீம். அதன் பின்பு சூர்யா- ஜோதிகா தயாரிப்பில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு பாதியிலே நிற்கிறது.

பாலாவுடன் மீண்டும் சூர்யா நடிக்க தயக்கம் காட்டி வந்த நிலையில் ஜோதிகா கட்டாயத்தின் பேரில் சூர்யா நடிக்க ஓகே சொன்னதாக கூறப்படுகிறது.. மேலும் இந்த படத்தில் ஜோதிகா நடிப்பதாக இருந்த நிலையில் பாலா- சூர்யா இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, இந்த படத்தில் இருந்து ஜோதிகா விலகியதாக கூறப்படுகிறது. மேலும் இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்று ஜோதிகா முடிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பாலா – சூர்யா இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக வணங்கான் படம் பாதியிலே நிற்கிறது, இதனால் பெரும் நஷ்டம் ஏற்படும் வைய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த படம் தொடங்குவதற்கு காரணமாக இருந்த ஜோதிகா மீது சூர்யா உட்பட குடும்பத்தினர் கோபப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் 2d நிறுவனம் தயாரிப்பில் வெளியாகும் அணைத்து படங்களிலும் சூர்யா – ஜோதிகா வழங்கும் என இருவரும் பெயரும் இடம் பெற்று இருக்கும்.

ஆனால் 2டி தயாரிப்பில் விரைவில் வெளியே வர இருக்கும் விருமன் படத்தில் சூர்யா வழங்கும் என சூர்யா பெயர் மட்டும் இடம்பெற்று இருக்கிறது.இதனால் ஜோதிகா பெயர் நீக்கப்பட்டுள்ளது பெரும் சலசலப்பை உருவாகியுள்ளது. மேலும் சமீப காலமாக சினிமா நிகழ்ச்சிகளில் மனைவி ஜோதிகா இல்லாமல் சூர்யா தனியாக கலந்து கொள்கிறார். இதனால் சூர்யா- ஜோதிகா இருவருக்கும் என்ன பிரச்சனை என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகை அதிதி சங்கர் வைத்த ஆப்பு… தேம்பி தேம்பி அழுத ராஜலக்ஷ்மி.. என்ன நடந்தது தெரியுமா.?