விளம்பரம் பண்ண காசு கூட வரல… அடுத்து நாலு படத்தில் தெருவுக்கு வந்துவிடுவார் லெஜெண்ட் சரவணன்..!

0
Follow on Google News

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லெஜன்ட். சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கின்ற நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையில், தன்னுடைய சொந்த தயாரிப்பில் லெஜெண்ட் சரவணன் நடித்த லெஜெண்ட். இந்த படம் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியானது.

யூ டுயூபர்ஸ் என பலருக்கு பணம் கொடுத்து லெஜெண்ட் படத்துக்கு பிட்டப் கொடுக்கப்பட்டு வந்தது. இருந்தும் மக்கள் யாரும் பெரிதாக இந்த படத்தை கண்டு கொள்ளவில்லை. மேலும் லெஜெண்ட் படம் பேன் இந்தியா படம் என்று கூட விளம்பரம் செய்தது பெரும் கேலிக்கூத்தாக இருந்தது. சந்திரமுகி படத்தில் எப்படி ஜோதிகா தன்னை சந்திரமுகியாக நினைத்து கொண்டு சந்திரமுகியாக மாறினர்.

அது போன்று, தன்னை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று நினைத்துக் கொண்டு நடந்து கொண்டார் லெஜெண்ட் சரவணன். தமிழ்நாட்டிலே இவர் படத்திற்கு வரவேற்பு இல்லாத சூழலில், பிற மொழிகளிலும் லெஜெண்ட் படத்தை டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. ஆனால் அந்த படத்தை வாங்க யாரும் முன் வரவில்லை.

லெஜெண்ட் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு கேரளா, மும்பை என சென்ற லெஜெண்ட் சரவணன், உடன் இரண்டு அல்லது மூன்று நடிகைகளை அழைத்துச் சென்று, அந்த நடிகைகள் மத்தியில் பத்திரிக்கையாளர்களை சந்திப்பார். இப்படி இவர் பிரமோஷனுக்காக அழைத்துச் செல்லும் நடிகைகளுக்கும் பெருந்தொகை சம்பளம் கொடுத்து அழைத்துச் சென்றுள்ளார். மேலும் பிற மாநிலங்களுக்கு பிரமோஷன் நிகழ்ச்சிக்கு சென்ற லெஜெண்ட் சரவணன் அங்கே, பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

ஆனால் தமிழ்நாட்டில் பதிக்கையாளர்களை சந்திக்கவில்லை. இது அவர் ரஜினிகாந்த் பார்முலாவை பின்பற்றுகிறார் என கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது லெஜெண்ட் படத்தின் கிராஸ் கலெக்ஷன் சுமார் 10 கோடி வரை வசூல் ஆகின்றது. அதில் தயாரிப்பாளர் லெஜன்ட் சரவணன் கைக்கு சுமார் 3 கோடி மட்டும் தான் சென்றுள்ளது என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுமார் 40 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்து கைக்கு வெறும் 3 கோடி தான் கிடைத்துள்ளதாக கூறப்படும் நிலையில். அவருடைய படத்திற்கு விளம்பரம் பண்ண காசு கூட அவருக்கு கிடைக்கவில்லை. மேலும் இதுபோன்று அவர் சினிமா ஆசையில் அடுத்து நான்கு படம் மட்டும் எடுத்தால் தெருவுக்கு வந்து விடுவார் என்கின்றது சினிமா வட்டாரம்.

நடிகை அதிதி சங்கர் வைத்த ஆப்பு… தேம்பி தேம்பி அழுத ராஜலக்ஷ்மி.. என்ன நடந்தது தெரியுமா.?