படத்தை பற்றி முழு அலசல் இதோ…பிச்சைகாரன் படம் எப்படி இருக்கு…

0
Follow on Google News

நடிகர், இசையமைப்பாளர், விஜய் ஆண்டனி நடிப்பில் இதற்கு முன்பு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று அவருக்கு பேரும் புகழும் வாங்கித் தந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற 500 ரூபாய் நோட்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என்கிற காட்சி ஓன்று இடம்பெற்று இருக்கும், இது அந்த படம் வெளியான அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்தது பிச்சைக்காரன் படத்தை பார்த்த பலருக்கு ஆச்சரியம்.

இந்த சம்பவம், அந்த படத்திற்கு மேலும் விளம்பரத்தை தேடி தந்தது. இந்த நிலையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஆரம்பத்தில் ஒரு மருத்துவ சம்பந்தமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதில் ஒருவர் மூளையை எடுத்து மற்றொரு மனிதனுக்கு பயன்படுத்தலாம்.

இது போன்ற முயற்சியை தாங்கள் பலமுறை குரங்குகளில் செயல்படுத்தி வெற்றிகரமாக செய்துள்ளோம். அரசாங்கம் இதற்கு அனுமதி கொடுத்தால் மனிதர்களுக்கும் தாங்கள் செய்ய தயாராக இருக்கின்றோம் என மருத்துவர் ஒருவர் பேட்டி கொடுப்பது, இது மருத்துவம் சார்ந்த ஒரு கதை என்கின்ற ஒரு ட்விஸ்ட் அந்த படத்தில் பார்க்க முடிகிறது.

மேலும் இந்த படத்திற்கான சுவாரசியம் எந்த இடத்திலும் குறையவில்லை.சுமார் ஒரு லட்சம் கோடிக்கு அதிபதியான விஜய் ஆண்டனி சொத்துகளை ஆட்டைய போடுவதற்காக ஒரு கும்பல் சுற்றுகிறது. அதற்காக அவர்கள் தேர்வு செய்யும் ஐடியா தான் மருத்துவர் சொன்ன மூளை மாற்று அறுவை சிகிச்சை. அதாவது ஆண்டனியை அடித்து விட்டு வேறு ஒரு பிச்சைக்காரனின் மூளையை எடுத்து தொழில் அதிபர் விஜய் ஆண்டனிக்கு பொருத்துகிறார்கள்.

இதற்கு காரணம் நாம் சொல்வதை எல்லாம் கேட்கக்கூடிய ஒருவர் மூளையை தொழிலதிபர் விஜய் ஆண்டனிக்கு பொருத்தும் பொழுது அவருடைய சொத்துக்களை நாம் எளிதாக அபகரித்துக் கொள்ளலாம் என்கின்ற ஒரு திட்டத்துடன் தான் மூளை மாற்று அறுவையை எதிரிகள் செய்கிறார்கள். மூளை மாற்றி அறுவை சிகிச்சை செய்த பின்பு இவர்கள் நினைத்தது போன்று எதிரிகள் சொல்வதை கேட்கும் படியான ஆட்களாக இல்லை விஜய் ஆண்டனி.

இதனால் விஜய் ஆண்டனியை காலி செய்ய திட்டமிடுகிறார்கள் எதிரிகள், ஆனால் விஜய் ஆண்டனி எதிரிகளை அடித்து கொலை செய்துவிட்டு கல்லை கட்டி கடலில் இறக்கி விடுகிறார் விஜய் ஆண்டனி. ஒரு கட்டத்தில் தான் பிச்சைக்காரன் இல்லை, தான் மிகப்பெரிய பணக்காரர் என்கின்ற உண்மை விஜய் ஆண்டனிக்கு தெரிய வருகிறது.

இதனை தொடர்ந்து தன்னிடம் இருக்கும் பணத்தில் மிகக் குறைந்த விலையில் அரிசி பருப்பு போன்றவைகளை மக்களிடம் கொடுத்து வருகிறார். இது அரசியல்வாதிகளின் கண்களை உறுத்துகிறது. இப்படியே போனால் அடுத்த தேர்தலில் நின்று இவர் வெற்றி பெற்று வருவார் என்கின்ற ஒரு அச்சம் அரசியல்வாதிகள் மத்தியில் நிலவுகிறது.

இதன் பின்பு, அரசியல்வாதிகளுக்கும் விஜய் ஆண்டனிக்கு இடையில் மோதல் ஏற்படுகிறது இருந்தும் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறார் விஜய் ஆண்டனி, இந்த படத்தில் இடம்பெற்ற நீதிமன்ற காட்சிகள், சண்டை காட்சிகள், என அனைத்தும் அருமையாக உள்ளது. சமீபத்தில் வெளியான படங்களில் ரசிக்கும் படியாக ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது பிச்சைக்காரன் 2.