முடிந்தால் மோதி பார்..! தோல்வியை தழுவினால் சினிமாவை விட்டு விலக தயாரா.? நடிகர் சூர்யாவுக்கு இயக்குனர் ஹரி சவால்..

0
Follow on Google News

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக சூரரைப் போற்று படம் வெளியானது. இந்தப் படம் முடித்த கையோடு இரண்டு படங்கள் நடிக்க ஒப்பந்தமானார். ஒன்று, ஹரி இயக்கத்தில் அருவா, மற்றொன்று வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’. முதலில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது, தொடர்ந்து 8 படங்கள் வரை தோல்வி படங்களை கொடுத்து வந்த சூர்யா சமீபத்தில் வெளியான சூரரை போற்றும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு மெகா ஹிட் படங்களை கொடுத்து வந்த இயக்குனர் ஹரியிடம் சூரரை போற்று படத்தில் நடித்த போதே அடுத்த படத்துக்கான கதை தயார் செய்ய கேட்டு கொண்டுள்ளார், இதனை தொடர்ந்து அருவா படத்தை சூர்யாவுக்காக தயார் செய்துள்ளார், கதையை கேட்ட சூர்யா அருமையாக இருக்கு விரைவில் இந்த படத்துக்கான தயாரிப்பாளரை ஏற்பாடு செய்கிறேன் என சூர்யா உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

இதே போன்று வெற்றிமாறனிடமும் கதை கேட்டுள்ளார் சூர்யா, அந்த படத்துக்கு வாடிவாசல் என பெயரிடப்பட்டது, ஆனால் இருவரிடமும் கதையை கேட்டுவிட்டு பாண்டிராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 40’ படப்பிடிப்பை தொடங்கினர் சூர்யா இது இயக்குனர் ஹரிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. பாண்டிராஜ் இயக்கிவரும் ‘சூர்யா 40’ படத்தை முடித்த கையோடு, வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிக்க இருக்கும் தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து சூர்யாவுக்காக கதையை தயார் செய்துவிட்டு காத்திருந்த இயக்குனர் ஹரி, முறையான பதில் ஏதும் வராத காரணத்தினால் இறுதியாக நடிகர் சூர்யா முடிவை என்ன என்பதை அறிய முயன்றார், அதற்கு சூர்யா தரப்பில் கோவித்து கொள்ளாதீர்கள், நீங்க எடுத்த கடைசி படம் சாமி இரண்டாம் பாகம் தோல்வியை தழுவியதை தொடர்ந்து உங்கள் இயக்கத்தில் நடிக்க சூர்யா தயக்கம் காட்டுகிறார் என தெரிவிக்க கடுப்பான இயங்குனர் ஹரி.

தனது மச்சான் நடிகர் அருண் விஜயை வைத்து, நடிகர் சூர்யாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கதையை படமாக்கி வருகிறார், தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் படத்துக்கு யானை என பெயரிடப்பட்டுள்ளது, சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் அதே நாள் அருண் விஜய்யை வைத்து இயக்கிய யானை படத்தையும் வெளியிட இயக்குனர் ஹரி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் இயக்குனர் ஹரி தெரிவிக்கையில், என்னை நம்ப வைத்து ஏமாற்றிய சூர்யாவுக்கு பாடம் புகட்ட தான் அவருடைய படம் வெளியாகும் அதே தேதியில் என்னுடைய படத்தை வெளியிடுகிறேன், முடிந்தால் மோதி பார்க்கட்டும், இதில் தோல்வியை தழுவினால் சினிமாவை விட்டு விலகுவாரா சூர்யா என சவால் விட்டு இயக்குனர் ஹரி பேசியதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது குறிப்பிடதக்கது.

சூர்யா, விஜய் சேதுபதி, திராவிட குஞ்சு சித்தார்த்… தம்பிகளா எங்கடா போனீங்க.? நீட் தேர்வு தற்கொலை சம்பவம், வெளுத்து வாங்கிய திருமாறன் ஜி.