வறுமையில் பார்வதி அம்மாள்….சூர்யா, ஜோதிகாவுக்கு நன்றி சொல்லிவிட்டு ராகவா லாரன்ஸ் என்ன காரியம் செய்துள்ளார் தெரியுமா.? அட என்ன மனுஷன்யா இவர்..

0
Follow on Google News

கடந்த மாதம் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது, ஒரு பக்கம் இந்த படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், அந்த சர்ச்சையின் காரணமாக திரைப்படத்துக்கு மிக பெரிய விளம்பரத்தை பெற்று தந்து வசூலை வாரி குவித்தது, இதனை தொடர்ந்து படத்தின் தயாரிப்பார் சூர்யா மற்றும் ஜோதிகா இருவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த படத்தின் உண்மைக்கதைநாயகனான ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் வறுமையில் இருப்பதை அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ் முன்வந்து அவர்களுக்கு தனது செலவில் வீடு ஒன்றை கட்ட ஏற்பாடு செய்தார் ஆனால் அடுத்து நடந்த சம்பவம் குறித்து ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார் அதில், முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் ஜெய்பீம் பட குழுவுக்கு நன்றி தெரிவித்த ராகவ லாரன்ஸ்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, ஜெய்பீம் படத்தின் உண்மைக்கதைநாயகனான ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் வறுமைநிலையில் வாழ்ந்து வருவதை ‘வலைப்பேச்சு’ மூலம் அறிந்த பிறகு, பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருந்தேன். பார்வதி அம்மாவை நேரில் சந்தித்தும் அவரிடம் இதுபற்றி தெரிவித்தேன். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகில் உள்ள, கீழ நத்தம் கிராமத்தில் பார்வதி அம்மாளின் மகளுக்கு நிலம் உள்ளது என்றும் அந்த இடத்தில் வீடு கட்டித்தரும்படி கேட்டுக்கொண்டனர்.

அதன்படி சில நாட்களுக்குமுன் கீழநத்தம் கிராமத்துக்கே சென்று வீடு கட்டுவதற்கான நிலத்தை பார்வையிட்டு வந்தோம். விரைவில் வீடுகட்டும் பணியைத் தொடங்கும் முயற்சியில் இருந்தநிலையில்,பார்வதி அம்மாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டித்தர இருப்பதாக தொலைக்காட்சி செய்தி மூலம் அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். பார்வதி அம்மாவின் இன்றைய வறுமைநிலையை அறிந்து அவருக்கு வாழ்விடத்தை கட்டிக்கொடுக்க முன்வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித்தருவதற்காக நான் ஒதுக்கிய 5 லட்சத்துடன் மேலும் 3 லட்சம் சேர்த்து, பார்வதி அம்மாள், அவருடைய மகள், மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் ஆகியோருக்கு தலா இரண்டு லட்சங்களை வழங்க முடிவு செய்துள்ளேன். பார்வதி அம்மாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நல்லது நடப்பதற்கு காரணமாக இருந்த ஜெய்பீம் படக்குழுவினருக்கும், ஜெய்பீம் படத்தை தயாரித்த திரு.சூர்யா, திருமதி.ஜோதிகா, இயக்குநர் திரு. த.செ. ஞானவேல் அனைவரையும் இத்தருணத்தில் நன்றியோடு நினைவுகூர்வோம் என தெரிவித்துள்ளார்.