என்னை மன்னித்து சேத்துக்கங்க! கண்ணீர் விட்டு கதறிய சீதா.. பார்த்திபன் என்ன சொன்னார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகை சீதா இருவரும் காதலித்து 1990ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர், இந்த தம்பதியினருக்கு, அபிநயா, கீர்த்தனா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன, இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், நடிகர் மாதவன் மற்றும் நடிகை சிம்ரன் நடிப்பில் வெளிவந்த கண்ணத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் பார்த்திபன் மகள் கீர்த்தனா நடித்திருந்தார், இந்த படத்தில் நடித்ததற்கு தேசிய விருது அவருக்கு கிடைத்தது.

பார்த்திபன் – சீதா தம்பதியரின் வாழ்கை சிறப்பாக சென்ற நிலையில்,இவன் படத்தில் பார்த்திபன் உடன் இணைந்து நடித்த நடிகை சௌதர்யா உடன் நெருக்கமாக பார்த்திபன் இருப்பதாக கிசு கிசு எழுந்தது, இதனை தொடர்ந்து பார்த்திபன் – சீதா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தொடர்ந்து இருவருக்கும் இடையில் சிறு சிறு சண்டைகள் ஏற்பட்டதாக அப்போது கூறப்பட்டது, இதனை தொடர்ந்து விவாகரத்து பெற்று பார்த்திபன் – சீதா தம்பதியினர் 2001ம் ஆண்டு பிரிந்தனர்.

பார்த்திபன் உடன் கிசு கிசுக்கப்பட்ட நடிகை சௌந்தர்யா தமிழ் வெளிவந்த அருணாச்சலம், படையப்பா போன்ற மெகா ஹிட் படத்தில் நடித்தவர், இவர் 2003 ஆம் ஆண்டு தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்தவர் 2004ஆம் ஆண்டு ஹெலிகாபெட்டெர் விபத்தில் மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது, பார்த்திபன் – சீதா இருவரும் விவாகரத்து பெற்ற பின் அவர்களின் குழந்தைகள் பார்த்திபன் வசம் தான் அதிக நாட்கள் வசித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விவாகரத்து பெற்று பார்த்திபனிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்த நடிகை சீதா , சின்னத்திரை நடிகர் சதீஸ் என்பவரை 2010 இரண்டாவது திருமணம் செய்து 2016 வரை வாழ்ந்து வந்துள்ளார், இதன் பின்பு அவரிடம் இருந்து பிரிந்து கடந்த நான்கு ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வருகிறார், இந்நிலையில் கடந்த ஆண்டு மகள் கீர்த்தனா திருமணம் நடந்து முடிந்த நிலையில் மீண்டும் பார்த்திபன் உடன் இணைந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளார் சீதா.

ஆனால் பார்த்திபன் இதற்கு சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது, இந்நிலையில் பார்த்திபனை நேரில் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்த சீதா அதற்கான ஏற்பாடுகளை தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார், இந்த சந்திப்பு ஏற்படும் நடந்துள்ளது, அப்போது என்னை மன்னித்து விடுங்கள், இனிமேல் நாம் சேர்ந்த வாழ்வோம் என சீதா கண்ணீர் விட்டு அழுதுள்ளார், ஆனால் பார்த்திபன் பிரிந்தது பிரிந்தது தான், பிரிந்தே வாழ்வோம் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.