நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் சிக்கல்.!ஜோசியர் சொன்ன பகீர் தகவல்.!அப்படியானால் விக்னேஷ் சிவன் வாழ்க்கை.?

0
Follow on Google News

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே, நடிகர் சரத்குமார் நடித்த ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை நயன்தாரா வல்லவன் படத்தில் நடித்த போது நடிகர் சிம்புவுடன் காதல் வயப்பட்டார், ஆனால் குறுகிய காலத்தில் சிம்பு-நயன்தாரா இடையிலான காதல் பிரிந்தது, இதற்கு காரணம் சிம்பு தன்னை ஏமாற்றி விட்டதாக நயன்தாரா தனது நட்பு வட்டாரத்தில் தெரிவித்ததாக செய்திகள் வெளியான.

இந்நிலையில் தொடர்ந்து தனது காதலை புதுப்பிக்க சிம்பு முயன்ற போது நயன்தாராவின் பிடிவாதத்தால் சிம்புவின் முயற்சி பலன் தரவில்லை, அதன் பின் நடிகர் பிரபுதேவா உடன் காதல் வயப்பட்ட நயன்தாரா, இந்த காதல் திருமணம் வரை சென்று நின்றது, இதற்கு காரணம் பிரபுதேவா தனது மனைவியை விட்டு பிரிந்துவிட்டதாக பொய் பேசி திரைமறைவில் மனைவியுடன் தொடர்பு வைத்து கொண்டு நயன்தாராவிடம் இருந்து ஏமாற்றி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நயன்தாரா மீண்டும் நடிக்க தொடங்கிய சில படங்களில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார். இந்த காதல் சுமார் 5 வருடங்களை கடந்து இருவரும் காதலித்து வருகின்றனர்,இருவரும் எங்கே சென்றாலும் ஒன்றாக செல்வது, கோவிலுக்கு சென்று இருவரும் ஜோடியாக சாமி தரிசனம் செய்யும் இந்த காதல் ஜோடியின் திருமணம் எப்போது என்பது தான் மர்மமாக இருந்து வந்தது.

இந்நிலையில் பிரபுதேவா உடன் ஏற்பட்ட காதல் பிரிவுக்கு பின் வீட்டில் முடங்கிய நயன்தார தனது குடும்ப உறவினர் ஆலோசனைபடி கேரளவில் உள்ள புகழ் பெற்ற ஜாதகம் பார்க்கும் ஜோசியரை அணுகிய போது இத்துடன் உன் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நீ தவறாக நினைக்க வேண்டாம், இனிமேல் தான் உன் வாழ்க்கை பிரகாசமாக இருக்க போகிறது. நீ செய்யும் துறையில் மிக பெரிய உச்சத்தில் யாரும் அசைக்க முடியாதபடி சிம்மாசனம் போட்டு அமர போகிறாய் என ஜோசியர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை நயன்தாரா, ஜோசியர் சொன்னது போன்று தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து மிக பெரிய பெயர், புகழை அடைந்தார். தற்போது வரை பிசி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா 36 வயதை கடந்துள்ள நிலையில் தனது காதலன் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பின்பு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தும் முடிவில் இருக்கிறார்.

இதனை தொடர்ந்து திருமணம் செய்வது தொடர்பாக எப்போதும் ஜாதகம் பார்க்கும் ஜோசியரை சந்தித்து ஜாதகம் பார்த்துள்ளார் நயன்தாரா. ஆதற்கு நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது திருமணம் செய்தால் குறுகிய காலத்தில் இவர்கள் இருவருக்கும் பிரிவு ஏற்படும் என்றும், நயன்தாரா ஜாதகப்படி 25 வயதுக்குள் திருமணம் செய்திருக்க வேண்டும் அப்படி இல்லாததால் 37 வயது முழுமை அடைந்த பின்பு தான் திருமணம் செய்யவேண்டும் அப்போது தான் இல்லற வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்றும்.

மேலும் திருமணத்திற்கு முன்பு இருவரும் குறிப்பிட்ட இந்த முக்கியஸ்தலங்களுக்கு சென்று வழிபட வேண்டும் என தெரிவித்ததை தொடர்ந்து அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு தான் நயன்தாரா திருமணம் நடைபெறும் என்றும், அதுவரை தொடர்ந்து நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் காதலர்களாகவே இருக்க போவதாக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.