நடிகர் விஜயின் ஆணவம்…. முகத்தில் அடித்தது போன்று பதிலடி கொடுத்த மூத்த நடிகர் யார் தெரியுமா.? இந்த அசிங்கம் தேவையா விஜய்.?

0
Follow on Google News

நடிகர் விஜய் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளார். அவருடைய தந்தை SA சந்திரசேகர் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்ட விஜய், ஆரம்ப கட்டத்தில் அவர் நடித்த படம் சரிவர போகவில்லை என்றாலும் தொடர்ந்து சினிமாவில் சாதிக்க கடுமையாக போராடியவர், இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக படத்தின் வெற்றியின் மூலம் நடிகர் விஜய்க்கு தமிழ் சினிமாவில் அங்கீகாரம் கிடைத்தது

இதை தொடர்ந்து காதலுக்கு மரியாதை,என அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்த விஜய் கில்லி போன்ற மாஸ் படங்களில் நடித்து முன்னனி நடிகராக உள்ளார். இந்நிலையில் விஜய் யாரிடமும் அதிகம் பேசமாட்டார் என பரவலாக சினிமா வட்டாரதத்தில் பேசப்பட்டு வந்தாலும், சமீப காலமாக அவர் மூத்த நடிகர்கர்களை அவமரியாதை செய்து வருவதாக பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறார், இது குறித்து சில மூத்த நடிகர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து பொது வெளியில் பேசி வருகின்றனர்.

நடிகர் ராதாரவி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசுகையில், என் பேரன் விஜய்யின் தீவிர ரசிகர். அவர் விஜய்யை பார்க்கவேண்டும் என கூறினான். அதனால், ஒரு நாள் குடும்பத்துடன் அழைத்துச்சென்றேன். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். இது எட்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது. சமீபத்தில், சர்கார் படத்தில் விஜயுடன் நடித்திருந்தேன். இதற்கு விஜய்-யை நேரில் சந்தித்து நன்றி சொல்ல அனுமதி கேட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

ஆனால், விஜய்யின் உதவியாளர் போனை எடுத்து அதற்கு சம்மதம் சொன்ன விதம் தான் ராதாரவியை மனமுடைய செய்திருக்கிறது. ”வாங்க, ஆனால் அன்று போல கூட்டத்தை கூட்டிட்டு வந்துடாதீங்க” என்று விஜயின் உதவியாளர் ராதாரவியிடம் சொல்லியிருக்கிறார். எட்டு வருடத்திற்கு முன்பு ராதாரவி அழைத்து சென்றது அவரது குடும்பத்தை, அவர் குடும்பத்தை கூட்டம் என்று விஜயின் உதவியாளர் அநாகரீகமாக பேசியதால் மனமுடைந்து போயுள்ளார் ராதாரவி,

அவர் பேசிய வார்த்தைக்குப் பிறகு ராதாரவி விஜையை சந்திக்க போகவே இல்லையாம்.அன்று முதல் விஜய் வீட்டு பக்கமே போவதில்லையாம். இதே போன்று நடிகர் நெப்போலியன் சமீபத்தில் நடிகர் விஜயால் தனக்கு ஏற்பட்ட அவமரியாதை பற்றி பேசியுள்ளார். இதுபற்றி நெப்போலியன் கூறியதாவது ‘போக்கிரி படத்தில் நான் பிரபுதேவா அதிகம் வற்புறுத்தி கேட்டுக் கொண்டதால் தான் நடிக்க ஒப்புக் கொண்டேன். அந்த படத்தில் நடிக்கும் நடந்த சம்பவம்.

அதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நடந்த சம்பவம் உண்மை தான். போக்கிரி படத்தில் பிரபுதேவா இயக்கத்தில் அவரும் நானும் ஒன்றாக நடித்தோம். ஷாட் முடிந்து வெளியே வரும் போது நடந்த சம்பவம் அது. அதை விரிவாக சொல்ல விரும்பவில்லை. அந்த மாதிரி ஒரு சூழ்நிலை யாருக்கும் வரக்கூடாது. என் வாழ்க்கையில் அப்படி யாரும் என்னிடம் பேசியதில்லை. நடந்து கொண்டதில்லை. எந்த சூழ்நிலையில் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பது தெரியவில்லை.

அப்போதிலிருந்து அவருடன் நான் பேசுவதும் இல்லை, அவரது படங்களை நான் பார்ப்பதும் இல்லை’ என நடிகர் நெப்போலியன் தெரிவித்துள்ளார். நடிகர் ராதாரவி மற்றும் நடிகர் நெப்போலியன் போன்றவர்கள் தமிழ் சினிமாவில் மதிக்கத்தக்க முக்கிய நடிகர்கள் இவர்களுக்கு இந்த நிலைமை என்றால், நடிகர் விஜய் உடன் நடிக்கும் மற்ற நடிகர்களின் நிலைமை இதை விட மோசம் என்கிறது சினிமா வட்டாரம்..