200 கோடி முதலீடு மாதம் 20 கோடி சம்பாரிக்கு சூர்யா.. என்ன தொழில் தெரியுமா.?

0
Follow on Google News

சினிமாவில் நடிகர்கள் இரண்டு வகை, அதில் நடிகர் கமல்ஹாசன், பார்த்திபன், சேரன் போன்ற நடிகர்கள் சினிமாவில் சம்பாரித்ததை சினிமாவில் முதலீடு செய்து, சம்பாரித்த மொத்த பணத்தையும் இழந்து கடனில் தத்தளித்து கொண்டிருப்பவர்கள். இதில் நடிகர் ரஜினிகாந்த்,விஜய் போன்ற நடிகர்கள், சினிமாவில் சம்பாரித்து அந்த பணத்தை வேறு ஒரு தொழிலில் முதலீடு செய்து பெரும் லாபம் சம்பாரித்து வரக்கூடியவர்கள்.

அந்த வகையில், கொங்கு மண்டலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் நடிகர் சூர்யா சினிமாவிற்கு வருவதற்கு முன்பே கொங்கு மண்டலத்தில் கார்மெண்ட்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். பின்பு சினிமாவில் அறிமுகமாகி கடும் போராட்டத்திற்கு பின்பு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான நந்தா படத்தின் மூலம் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று முன்னணி நடிகரானார் சூர்யா.

சினிமாவில் சம்பாரித்த பணத்தை வேறு ஒரு தொழிலில் முதலீடு செய்து அதன் மூலம் பெறும் லாபம் சம்பாதிப்பதில் மிக கவனமாக இருந்து வருகிறவர் சூர்யா. அந்த வகையில் பொள்ளாச்சியில் சூர்யாவுக்கு காற்றாலை உள்ளது. இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பையை பூர்விகமாக கொண்ட நடிகை சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் சூர்யா.

மனைவி ஆலோசனைபடி வர்த்தக நகரமான முன்பையில் தொழில் தொடங்க முடிவு செய்த சூர்யா.மனைவி ஜோதிகாவின் உறவினர்கள் மூலம் என்ன தொழிலில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என தீவீர ஆலோசனைக்கு பின்பு, முன்பையில் உள்ள ஹெல்த் மேனேஜ்மென்ட் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார் நடிகர் சூர்யா. மும்பையில் முதலீடு செய்த பின்பு பெரும்பாலும் அவர் சென்னையில் இருப்பதில்லை.

சமீப காலமாக அதிக நாட்கள் மும்பையில் குடும்பத்துடன் இருந்து வருகிறார். மும்பையில் ஹெல்த் மேனேஜ்மென்ட்ல் சுமார் 200 கோடி முதலீடு செய்துள்ள நடிகர் சூர்யா, அதன் மூலம் மாதம் 20 கோடி லாபம் சம்பாரித்து வருவதாக கூறப்படுகிறது. அண்ணன் சூர்யாவை பார்த்து தம்பி கார்த்தியும் முன்பையில் சுமார் 50 கோடி முதலீட்டில் மாதம் 5 கோடி வரை லாபம் சம்பாரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மும்பையில் மேலும் பல தொழில்கள் தொடங்க திட்டமிட்டுள்ள சூர்யா, அடுத்தடுத்து எந்த தொழிலில் முதலீடு செய்யலாம் என்கிற ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் மும்பையில் முதலீடு செய்யப்பட்டுள்ள தொழில்கள் அனைத்தையும் மனைவி ஜோதிகா மேற்பார்வையில் நடைபெற்று வருவதால், விரைவில் குடும்பத்துடன் மும்பையில் நிரந்தரமாக சூர்யா குடியேற இருப்பதாகவும் கூறப்படுவது.

அஜித்திடம் இருக்கும் கருப்பு பணம் …. ரெய்டுக்கு பயந்து அந்த பணத்தை அஜித் என்ன செய்தார் தெரியுமா.?