பணத்துக்கு பணமும் போச்சு… மானம் மரியாதையும் போச்சு… பாவம்யா லெஜெண்ட் சரவணன்..

0
Follow on Google News

தமிழகத்தில் பல்வேறு இடங்களில்  செயல்பட்டு வரும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன். தொழில் அதிபராக சமுதாயத்தில் மிக பெரிய மதிப்பு மரியாதையும் சரவணனுக்கு உண்டு. தன்னுடைய கடை விளம்பர படங்ககளில் அந்தந்த காலகட்டத்தில் இருக்கும் முன்னனி நடிகைகளுக்கு அதிகம் சம்பளம் கொடுத்து தன்னுடைய சரவணா ஸ்டோர்ஸ் கடை விளம்பரங்களில் நடிக்க வைத்து வந்தார் லெஜெண்ட் சரவணன்,

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் படங்களை இயக்கி வந்த ஜேடி மற்றும் ஜெரி இருவரும், லெஜெண்ட் சரவணனிடம், அண்ணாச்சி நீங்களே விளம்பரங்களில் நடிக்கலாமே என உசுப்பேத்தி விட்டதாக கூறப்படும் நிலையில், அண்ணாச்சி மட்டும் விளம்பர படங்களில் நடித்தால் அது ஹிட் ஆகாது என்பதால் அண்ணாச்சி உடன் சேர்ந்து முன்னனி நடிகைகளை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போது, அண்ணாச்சி உடனா என சில நடிகைகைகள் தயக்கம் காட்ட.

சம்பளத்தை அதிகரித்து கொடுத்து விளம்பர படங்களில் தன்னுடன் ஆட்டம் போட வைத்தவர் அருள் சரவணன். இவர் நடித்த விளம்பர படங்கள் கேலி கிண்டல் காரணமாகவே பிரபலமானது. பெரும்பாலும் அண்ணாச்சி நடிக்கும் விளம்பர படங்களை ட்ரோல், மீம்ஸ் போட, அண்ணாச்சி உங்க விளம்பர படங்கள் செம்ம ஹிட் எந்த பக்கம் பார்த்தாலும் உங்களுடைய விளம்பர படங்கள் பற்றி தான் பேச்சு என கேலி கிண்டல் செய்து வருவதை திரித்து அண்ணாச்சி நீங்க தான் மாஸ் என விளம்பர படங்களை இயக்கிய ஜேடி மற்றும் ஜெரி ஆகியோர் உசுப்பேத்தி விட்டதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் எவ்வளவு நாட்களுக்கு தான் அண்ணாச்சியை வெச்சு விளம்பர படங்கள் மட்டுமே எடுத்து காலத்தை ஓட்டுவது என முடிவுக்கு வந்த ஜேடி மற்றும் ஜெரி, அண்ணாச்சியை வெச்சு பெருசா ஏதாவது தேத்திட்டு வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்கிற முடிவுக்கு வந்து, அண்ணாச்சியின் வீக்னஸை புரிந்து கொண்டு, அவருடைய சினிமா ஆசையாக நாங்கள் நிறைவேத்துறோம், முதல் படமே மாஸா இருக்கும் என ஜேடி மற்றும் ஜெரி ஆகியோர் அண்ணாச்சியை உசுப்பேத்திவிட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற மொக்க படங்களை கொடுத்த ஜேடி மற்றும் ஜெரி ஆகியோர் அடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் அண்ணாச்சி கடை விளம்பர படங்களை இயக்கி வாழ்க்கையை ஓட்டி வந்தார்கள், பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த ஜேடி மற்றும் ஜெரி இருவரும் அண்ணாச்சியை உசுப்பேத்தி விட்டு அவர்களுக்கான வாய்ப்பை உருவாக்கி கொண்டனர்.

ஹீரோவாக வேண்டும் என்கின்ற தன்னுடைய நீண்ட நாள் கனவை நனவாக்கும் வகையில் லெஜெண்ட் படத்தை அருள் சரவணன் சொந்தமாக தயாரித்து நடித்தார். சினிமாவில் நடிகனாக வேண்டும் என்கின்ற ஆசை வருவது இயல்புதான், ஆனால் அதற்கான தகுதி நமக்கு இருக்கின்றதா என்பதை பரிசோதனை செய்துவிட்டு தான் நடிக்க வேண்டும்.  அந்த வகையில் அருள் சரவணன் சினிமாவில் நடிக்க நடிப்பதற்கு முன்பு நடிப்பை  ஓரளவு கற்று அறிந்திருக்க வேண்டும்.

ஆனால் எதுவுமே தெரியாமல், தன்னிடம் பணம் இருக்கின்ற ஒரே காரணத்தினால் சினிமாவில்  ஹீரோவாக அறிமுகமானார் அருள் சரவணன். மேலும் இந்த படத்திற்கு அதிக செலவில் விளம்பரம் செய்யப்பட்டு வந்தது.  படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு சென்ற சரவணன் அதிகம் பணம் கொடுத்து தன்னுடன் முன்னணி நடிகைகளை அழைத்து சென்றார்.ஆனால் தி லெஜன்ட் படம் வெளியாகி இந்த படத்தில்  நடித்த அருள் சரவணனை கேலி கிண்டல் செய்வதற்காக திரையரங்கு சென்றவர்களுக்கு கூட ஏமாற்றமே தான் மிஞ்சியது.

சினிமா ஆசையின் காரணமாக படத்தில் ஹீரோவாக நடித்து பல கோடி இழந்தது மட்டுமல்லாமல், குடும்பத்தினர் வெளியில் சொந்தம் பந்தங்கள் மற்றும் நெருங்கிய நட்பு வட்டத்தில் மத்தியில் தலை காட்ட முடியாத அளவுக்கு சரவணன் நடிப்பை கேலி கிண்டல் செய்து வந்தனர், அந்த வகையில் அண்ணாச்சியின் சினிமா ஆசையின் வீக்கனஸை சரியாக பயன்படுத்திக்கொண்டு லெஜெண்ட் படத்தின் மூலம் பல கோடி ஜேடி மற்றும் ஜெரி ஆகியோர் உருவிட்டு விட்டதாக கூறப்படும் நிலையில்,.,

படத்தில் நடிப்பதால் பல கோடி பணத்தை இழந்தது மட்டுமில்லாமல் மானம், மரியாதை மொத்தமும் போச்சு. அதனால் இந்த சினிமா ஆசையை கைவிட்டு, ஒரு தொழிலதிபராக மானம், மரியாதையுடன் வாழ்வதற்கு வழியை பாருங்கள், என அருள் சரவணனுக்கு நெருக்கமானவர்கள் அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது.