விவாகரத்து வரை சென்றது ஆர்யா – சாயிஷா திருமண வாழ்கை..! என்ன நடந்துச்சு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ஆர்யாவும், சாயிஷாவும் முதல்முறையாக, ‘கஜினிகாத்’ படத்தில் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவருக்கு 20 வயது வித்தியாசம் என்றாலும் கூட இருவரும் ஒரே மதத்தை சேர்த்தவர்கள் என்பதால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன், 2019ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர். ஹைதராபாத்தில் நடந்த இவர்களுடைய திருமணத்தில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். பின்னர் இவர்களது திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது.

நடிகை சாயிஷா திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ‘காப்பான்’ , ‘டெடி’ போன்ற படத்தில் இனைந்து நடித்துள்ளனர். கடந்தாண்டு ஆர்யா- சாயிஷா முதல் திருமண ஆண்டின் போது முடிந்தவரை எல்லா வழிகளிலும் என்னை நிறைவு செய்த மனிதர் நீங்கள். நீங்கள் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்ய முடியாது. அன்பு, உற்சாகம், தோழமை என அனைத்தும் ஒரே நேரத்தில் கிடைத்தது நான் உன்னை நேசிக்கிறேன். என சயிஷா தெரிவித்திருந்தார்.

இப்படி சந்தோசமாக சென்ற இவர்களின் வாழ்க்கையில் தற்போது உரசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஆர்யாவை சாயிஷா காதலித்து வந்த போது தொடர்ந்து தான் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாகவும் அதனால், சில வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் அதுவரை நாம் காதலர்களாவே இருப்போம் என சாயிஷா தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஆனால் நடிகர் ஆர்யா திருமணம் செய்ய பிடிவாதமாக இருந்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஆர்யாவின் விருப்பத்துக்கு ஏற்ப திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்த சாயிஷா, சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார், அதில் முக்கியமாக திருமணத்துக்கு பின்பு தான் தொடர்ந்து சினிமாவில் நடிக்க இருப்பதாக தெரிவித்த சாயிஷா, அதற்கு எந்த ஒரு காரணத்துக்காகவும் தடையாக இருக்க கூடாது என ஆர்யாவிடம் கட்டுப்பாடுகளை விதிக்க அதற்கு ஆர்யாவும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து ஆர்யா- சாயிஷா திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான படங்களில் நடித்த சாயிஷா கவர்ச்சியாக நடித்துள்ளதை தொடர்ந்து ஆர்யா உறவினர்கள் சிலர் என்னப்பா உன் மனைவி திருமணத்துக்கு பின்பு நடிக்க அனுமதிக்கலாமா என கேட்டதை தொடர்ந்து மனைவி சயிஷாவிடம் சினிமாவில் நடிப்பதை நிறுத்த வலியுறுத்தியுள்ளார், அதற்கு சாயிஷா திருமணத்துக்கு முன்பே நான் எனது விருப்பத்தை தெரிவித்துவிட்டு தான் திருமணம் செய்தேன். தற்போது இப்படி கட்டுப்பாடுகள் விதித்தால் நான் உன்னை விவாகரத்து செய்துவிடுவேன் என மிரட்ட உடனே சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆர்யா அனுமதித்ததாக சினிமா வட்டாரதத்தில் பேசப்படுகிறது.