மகனை வைத்து தனுஷுக்கு ஆப்பு வைத்த ஐஸ்வர்யா..! ஒரே கல்லில் இரண்டு மாங்கா..என்ன திட்டம் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2004ம் ஆண்டு தன்னை விட இரண்டு வயது குறைவானவரான நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சுமார் 18வருடம் தங்களின் திருமண வாழ்க்கையை முறித்து கொண்டு ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் ஒருமனதாக பிரிவதாக அறிவித்து, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

கணவர் தனுஷை விட்டு பிரிந்த பின்பு சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றார் ஐஸ்வர்யா. சமீபத்தில் மியூசிக் ஆல்பம் ஒன்றை வெளியிட்ட ஐஸ்வர்யா மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். தமிழ் மற்றும் ஹிந்தி படங்களை இயக்க இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு சினிமா வட்டாரத்தில் மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதால் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்க படுகிறது.

இந்நிலையில் மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள ஐஸ்வர்யா படப்பிடிப்புக்கான வேளைகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனால் இரண்டு மகன்களிடம் ஐஸ்வர்யாவுக்கு அதிக நேரம் செலவிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஆனால் தனுஷ் நேரம் கிடைக்கும் போது இரண்டு மகன்களிடம் அதிக நேரம் செலவு செய்து மகிழ்ச்சியாக இருக்கிறார். இதனால் தாய் ஐஸ்வர்யாவை விட தந்தை தனுஷ் மீது இரண்டு மகன்களும் அதிக பாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இரண்டு மகள்களும் முதலில் குடும்பத்தை பொறுப்புடன் பார்த்து கொள்ளவேண்டும், அதன் பின்பு தான் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது ஆரம்ப கட்டத்தில் இருந்து ரஜினிகாந்த் விருப்பமாக இருந்து வருகிறது, இந்நிலையில் ஐஸ்வர்யா சினிமாவில் பிசியாக இருப்பதால் இரண்டு மகன்களை கண்டு கொள்வதில்லை என்று, மகள் மீது ரஜினிகாந்த் உள்ள பயங்கர கோபத்தை மனைவி லதா மீது வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மகனுடன் அதிக நேரம் செலவு செய்வது, அதே நேரத்தில் சினிமாவில் சாதிப்பது என ஒரே நேரத்தில் இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், தற்பொழுது நடிகர் ராகவ லாரன்ஸ் நடிப்பில் தமிழில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கும் ஐஸ்வர்யா, அந்த படம் முடிந்ததும் தனது மூத்த மகன் யாத்ராவை ஹீரோவாக அறிமுகம் செய்து அடுத்த படத்தை ஐஸ்வர்யா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு முன்பு ராகவ லாரன்ஸ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பின் போது, மகன் யாத்ரா படிப்பிடிப்பு தளத்திற்க்கு வந்து அங்கு நடக்கும் படப்பிடிப்பு வேலைகளை பார்த்து நடிப்பை கற்று கொள்ளட்டும், என முடிவு செய்துள்ள ஐஸ்வர்யா, இதனால் மகனுடன் அதிக நேரம் செலவு செய்யலாம், சினிமா வேலைகளையும் பார்க்கலாம், அதே நேரத்தில் தனுஷை விட தன்னிடம் மகன்கள் அதிக பாசத்துடன் இருப்பார்கள், மேலும் தந்தை ரஜினிகாந்த் கோபத்துக்கு உள்ளாகாமல் இருக்கலாம் என்று பாலே திட்டமிட்டுள்ளார் ஐஸ்வர்யா என கூறப்படுகிறது.

ஒரு நிமிடம் கூட அங்க இருக்க கூடாது..தனுஷிடம் இருந்து மகன்களை பிரித்த ஐஸ்வர்யா.! என்ன நடந்தது தெரியுமா.?