அரக்க குணம் கொண்ட லதாவின் உண்மை முகம் உங்களுக்கு தெரியுமா.? தம்பி ரஜினியை நினைத்து உருகும் அண்ணன் சத்யநாராயண ராவ்..

0
Follow on Google News

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை பேட்டி எடுக்க வந்த கல்லூரி மாணவி லதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்களில் இரண்டாவது மகள் முதல் கணவனை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் தற்போது முதல் மகள் ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதியினர் பிரிவதாக அறிவித்துள்ளனர். இவர்கள் பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது.

தனுஷ் மீது பல கிசு கிசுக்கள் வந்தாலும் அதை பற்றியெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர் மனைவி. இந்நிலையில், தனுஷ் சினிமாவில் சம்பாரிக்கும் பணத்தில், தனது அண்ணன் செல்வராகவன், இரண்டு சகோதரிகள், மற்றும் தாய், தந்தைக்கு உதவி செய்து அவர்களுக்கு தேவையானதை செய்து தன்னை போல் தன்னை பெற்றவர்கள் மற்றும் உடன் பிறந்தவர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என செயல்பட்டு வருகின்றவர்.

ஆனால் இது அவரது மனைவிக்கு பிடிக்கவில்லை, இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இதில் செல்வராகவனுக்கு எந்த ஒரு வருமானமும் இல்லாததால், அவருடைய குடும்பத்தின் முழு செலவையும் தனுஷ் தான் பார்த்து கொள்கிறார். இந்நிலையில் இதனால் தொடர்ந்து தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை வர ஒரு கட்டத்தில் இனிமே உங்க குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பணம் கொடுக்க கூடாது என கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கண்டிஷன் போட்டுள்ளார் ஐஸ்வர்யா,

ஆனால் தனுஷ் உன்னுடன் இருந்தால் தானே எனக்கு பிரட்சனை, அப்படியெல்லாம் என்னுடைய குடும்பத்தை என்னால் தூக்கி எரிய முடியாது என ஐஸ்வர்யாவை விட்டு தனுஷ் பிரிய இதுவும் காரணம் என கூறப்படும் நிலையில், இதே போன்று லதாவை நடிகர் ரஜினிகாந்த் திருமணம் செய்த ஆரம்பக்கட்டத்தில், ரஜினியின் அண்ணன் மற்றும் அவரது உறவினர்கள் யாராவது கர்நாடகாவில் இருந்து வந்தால் அவர்களுக்கு தகுந்த மரியாதை கூட கொடுக்க மாட்டாராம் லதா.

தன்னை சார்ந்த குடும்ப உறுப்பினர்களை தனது கணவர் ரஜினிகாந்த் செல்வாக்கை பயன்படுத்தி அவர்கள் வளர்ச்சிக்கு உதவிய லதா, ரஜினிகாந்த் உறவினர்களை ஆரம்பத்தில் இருந்தே கட் செய்து விட்டார் என கூறபடுகிறது, ஆனால் இதனால் மனம் வருந்தாமல் தனது தம்பி ரஜினிகாந்த் நன்றாக இருந்தால் போதும் என கர்நாடகாவில் இருந்து கொண்டே தனது தம்பியின் வளர்ச்சியை ரசித்து வந்துள்ளார் அண்ணன் சத்யநாராயணா ராவ்.

பெரும்பாலும் ரஜினிகாந்த் தான் கர்நாடக சென்று தனது அண்ணன் மற்றும் உறவினர்களை பார்ப்பார், அவர்கள் யாரும் சென்னைக்கு வந்து ரஜினிகாந்தை பார்ப்பது மிக குறைவாம். இதற்கு காரணம் ஒரு கட்டத்தில் லதா இவர்களிடம் அவமரியாதையாக நடந்து கொண்டது தான் என்று கூறப்படும் நிலையில், தற்போது ஐஸ்வர்யா -தனுஷ் தம்பதியினர் பிரிந்துள்ளது குறித்து மன வேதனையில் இருக்கும் தம்பி ரஜினிகாந்தை நினைத்த சோகத்தில் அண்ணன் சத்யநாராயண ராவ் இருப்பதாக கூறபடுகிறது.