கதறிக்கொண்டு சரண்டரான தனுஷ் … மன்னித்து விடுவாரா லதா.? என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர், ஆரம்ப கட்டத்தில், நடிகர் ஸ்ரீகாந்த், சசிகுமார், ஜீவா, ஜெயம் ரவி நடிகர்கள் போன்று தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை தனுஷ் கொடுத்திருந்தாலும் அதன் பின்பு சினிமாவில் ஏற்பட்ட மிக பெரிய சரிவுக்கு பின்பு மாமனார் ரஜினிகாந்த் செல்வாக்கை பயன்படுத்தி சினிமாவில் நிலைத்து நின்று மேலும் உயர சென்றார் தனுஷ்.

இந்தியாவின் மிக பிரபலமானவர்களின் முக்கியமானவர் ரஜினிகாந்த் மகளை திருமணம் செய்த பின்பு மாமனார் செல்வாக்கை பயன்படுத்தி ஹிந்தி, ஹாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று, அவரது மகளுக்கே துரோகம் செய்யும் வகையில் சக நடிகைகளிடம் கிசு கிசுவில் தனுஷ் சிக்கிய பின்பு ஐஸ்வர்யா – தனுஷ் இடையே தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக அறிவித்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தான் சினிமாவில் உச்சத்துக்கு சென்று விட்டதால் இனி ரஜினிகாந்த் தயவு தனக்கு தேவையில்லை என முடிவு செய்த தனுஷ் மனைவியை விட்டு பிரிந்ததாக கூறப்படும் நிலையில், இவர்களை மீண்டும் இணைத்து வைக்கும் முயற்சியில் ரஜினிகாந்த் குடும்பத்தினர் செய்த முயற்சி தோல்வியை தழுவியது, மேலும் ரஜினி குடும்பத்தினர் எவ்வளவோ இறங்கி வந்தும் கூட தனுஷ் பிடிவாதமாக மீண்டும் என்னால் இணைந்து வாழ முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதன் பின்பு தனுஷுக்கு எதிரான ஆட்டத்தை ரஜினிகாந்த் குடும்பத்தினர் தொடங்கியதாக கூறப்படும் நிலையில், தமிழ் சினிமாவை தனது கட்டுக்குள் வைத்துள்ள பிரபல சினிமா பைனான்சியர் சமீபத்தில் போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் குடும்பத்தினரை சந்தித்துள்ளார், தனுஷ் பிடிவாதமாக இருப்பது குறித்து லதா ரஜினிகாந்த் தெரிவித்து இதனால் கணவர் ரஜினிகாந்த் வேதனையில் இருப்பதை நினைத்து வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நீங்கள் கவலை படாதீங்க அம்மா, எங்க சுற்றியும் என்னிடம் தனுஷ் வந்து தான் ஆகணும், இனி தனுஷ் நடிக்கும் படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு பைனான்ஸ் செய்ய மாட்டேன், கடன் வாங்காமல் படம் எடுத்தாலும் தனுஷ் படங்களை விநியோகம் செய்ய விடாமல் தடுத்து விடுகிறேன், எங்க சுற்றியும் என்னிடம் தான் தனுஷ் வரவேண்டும் அப்போது பேசி முடிவு செய்து விடுவோம் என அன்பு செழியன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் கவனத்துக்கும் சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், இதை சற்றும் எதிர்பாராத தனுஷ் தற்போது சரண்டராகும் விதத்தில், நான் மீண்டும் எனது மனைவியுடன் இணைந்து வாழ சில காலம் எனக்கு தேவை படுகிறது என தனக்கு நெருக்கடி கொடுத்து வரும் அன்புசெழியனுக்கு ஓலை அனுப்பியதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மருமகனை மன்னித்து மனம் மாறினால் தான் தனுஷ் சினிமா பயணத்தை தொடங்க முடியும் என்றும்,

மேலும், தமிழ் அல்லாத மொழிகளில் நடித்து வரும் தனுஷ் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்த தொடங்கினால் கூட லதா ரஜினிகாந்த் தனது செல்வாக்கை பயன்படுத்தி அங்கேயும் தனுஷ்க்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புகள் இருக்கும் நிலையில், மனைவி ஐஸ்வர்யா உடன் மீண்டும் இணைந்து வாழவில்லை என்றால் தனுஷ் சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது கூறிப்பிடத்தக்கது.

அஜித்தை தனி அறையில் வைத்து அன்புசெழியன் என்ன செய்தார் தெரியுமா.? அஜித் தப்பித்தது எப்படி.?