இதெல்லாம் திருப்பி தரமுடியாது…..தனுஷ் திட்டவட்டம்..! மூக்குடைபட்ட ஐஸ்வர்யா மற்றும் லதா..!

0
Follow on Google News

ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் பிரிவதாக அறிவித்து ஒரு மாதமாக உள்ள நிலையில், தாய் லதா உடன் இணைத்து கணவன் தனுஷ்க்கு ஐஸ்வர்யா வைத்த செக் தோல்வியில் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவிப்பு வெளியிடும் முன் தனுஷ் இந்த முடிவுக்கு தயக்கம் காட்டி வந்தாலும் ஐஸ்வர்யா தான் பிரிவதில் உறுதியாக இருந்ததாக கூறபடுகிறது.

இந்நிலையில் இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு தந்தை ரஜினிகாந்த் கோபத்துக்கு ஆளான ஐஸ்வர்யா மீண்டும் தனுஷ் உடன் இணைந்து வாழும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். இதனை தொடர்ந்து தனுஷ் உடன் மீண்டும் இணைந்து வாழ்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் நடிகர் தனுஷ் பிரிந்த பின்பு இணைவதில்லை என்பதில் உறுதியாக இருந்துள்ளார். இதனை தொடர்ந்து மீண்டும் இணைய பல்வேறு முயற்சிகளை ஐஸ்வர்யா ஈடுபட்டு வந்தார்.

ஆனால் தனுஷ் சரிப்பட்டு வரவில்லை. இதனை தொடர்ந்து தயார் ஆலோசனை படி தனுசுக்கு செக் வைத்து தன் வசப்படுத்த திட்டமிட்டார் ஐஸ்வர்யா, அதன் படி சொந்தமாக படம் தயாரித்து கடனாளியாக தனுஷ் தத்தளித்த போது. தந்தை ரஜினிகாந்த் காலா படத்தில் சம்பளம் வாங்காமல் தனுஷ் தயாரிப்பில் நடித்தார், அதில் வந்த லாப படத்தில் தான் வாங்கிய கடனை கட்டிய தனுஷிடம் தன்னை விட்டு பிரிவதால் தனது தந்தைக்கு வர வேண்டிய சம்பளத்தை திருப்பி தனுஷிடம் கேட்டுள்ளார் ஐஸ்வர்யா.

அதாவது ஓன்று பணத்தை திருப்பி தரவேண்டும் அல்லது தன்னுடன் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்பது தான் தாய் லதாவின் ஆலோசனையை கேட்ட ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷ்க்கு வைத்த செக். இதற்கு தனுஷ் சொன்ன பதில் தான் ஐஸ்வர்யாவுக்கு மிக பெரிய ஷாக் கொடுத்துள்ளது. அதாவது, மனைவி இயக்குனராக அடம்பிடித்ததால் சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கி 3 படத்தை தயாரித்து நடித்தார் தனுஷ்.

இதனால் பெரும் நட்டம் ஏற்பட்டது, இந்த நஷ்டத்துக்கு காரணம் மனைவி ஐஸ்வர்யா, அதே போன்று மனைவியின் தங்கை சௌந்தர்யா இயக்குனராக ஆசைப்பட்டு தன்னை தொந்தரவு செய்ததால் VIP 2 படத்தை சொந்தமாக தயாரித்து நஷ்டம் ஏற்பட்டது, இப்படி அக்கா, தங்கையும் இணைந்து என்னை கடனாளியாக்கி விட்டதால், இரண்டு மக்களால் மூத்த மருமகன் கடனாளியாக உள்ளார் என்பதை அறிந்து தான் சம்பளம் வாங்காமல் தனது தயாரிப்பில் காலா படத்தில் நடித்தார் ரஜினிகாந்த்.

எனது தயாரிப்பு நிறுவனத்தை கடனாக்கி இழுத்து மூட வைத்தது ஐஸ்வர்யாவும், சௌதர்யாவும் தான், ஆகையால் எதற்காக நான் அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். அதெல்லாம் தரமுடியாது என ஐஸ்வர்யா மற்றும் அவரது தாயார் போட்ட திட்டத்தை உடைத்து எரிந்துள்ளார் தனுஷ். இதனை தொடர்ந்து இந்த விவாகரத்துக்கு பின்பு தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் இணைவதர்க்கு வாய்ப்புகள் மிக குறைவு என கூறப்படுவது குறிப்பிட தக்கது.