போனி கபூருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு… எஸ் ஜே சூர்யா அதிரடி முடிவு!

0
Follow on Google News

வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ் ஜே சூர்யா. அதன் பிறகு அவர் நடிகராகவும் மிலிர்ந்து வருகிறார். 1999 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் வாலி. அந்த படத்தின் வெற்றி அந்த படத்தில் பணியாற்றிய பலருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தின் வெற்றியால் அஜித் எஸ் ஜே சூர்யாவுக்கு கார் ஒன்றையும் பரிசாக வாங்கி அளித்தார்.

இந்நிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது வாலி படத்தின் மூலம் ஒரு பிரச்சனை உருவாகியுள்ளது. அஜித்தின் தற்போதைய படங்களின் தயாரிப்பாளரான போனி கபூர் வாலி படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்காக அந்த படத்தின் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியிடம் ரீமேக் உரிமையை பெற்றுள்ளார்.

ஆனால் தன் அனுமதி இல்லாமல் அந்த படத்தை ரீமேக் செய்யக்கூடாது என எஸ் ஜே சூர்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் நீதிமன்றத்தில் போனி கபுர் படத்தை தயாரிப்பதற்கு தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து நடிகரும் இயக்குனருமான எஸ் ஜே சூர்யா இப்போது மேல் முறையீடு செய்ய உள்ளார்.