ரோஹிணிக்கு வில்லியான மாமியார் விஜயா… செம்ம குஷியில் முத்து… வசமாக சிக்கிய டுபாக்கூர் ரோகினி…

0
Follow on Google News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை. பணக்கார மருமகள்களை தான் தன்னுடைய பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என பேராசை கொண்ட மாமியாருக்கு, ஏழை வீட்டு மருமகளாக மீனா வருகிறார். இவரை தினமும், பல வேலைகள் செய்ய சொல்லி கொடுமை படுத்துகிறார் மாமியார் விஜயா.

அதே போல் விஜயாவின் இரண்டாவது மகன், நான் மிகப்பெரிய பணக்கார பெண் என ஏமாற்றும் ரோகிணியை திருமணம் செய்து கொள்கிறார். ரோகிணிக்காக விஜயா, தன்னுடைய சொத்து பத்திரத்தை அடமானம் வைத்து, பார்லர் ஒன்றை ஓப்பன் செய்து கொடுக்க, ஒரு கட்டத்தில் அந்த பார்லரை… வேறு ஒருவருக்கு சொந்தமாக்கி விட்டு அதில் வரும் பணத்தை கொண்டு, பார்லருக்காக விஜயாவிடம் வாங்கிய பணத்தை கொடுக்கிறார் ரோகிணி. இந்த பணம் தன்னுடைய துபாய் தந்தை அனுப்பியது என மீண்டும் பொய் சொல்கிறார்.

இப்படி பல பொய்கள் மற்றும் தெகிடு திட்டம் தீட்டி, இவர் வாழ்க்கை சென்று கொண்டிருக்க… எப்போது ரோகினி பற்றிய உண்மை தெரியவரும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்து வந்தது. அது தற்பொழுது நடந்ததுள்ளது. மீனாவை பார்க்க வந்த பைனான்சியரிடம் விஜயா வம்பு இழுக்கிறார். பின் மீனாவுக்கு கடனாக 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கிறார். ”500 மாலை கட்டி ஆயிரக் கணக்குல சம்பாதிக்குற ஏன் அது உனக்கு பத்தலையா அப்புறம் ஏன் கடன் வாங்குற” என விஜயா கேட்கிறார். ”கூடிய சீக்கிறம் உங்களுக்கே தெரிய வரும்” என மீனா சொல்கிறார்.

ரோகிணி வித்யாவிடம் ”அந்த பேங்க்காரங்க வேற திரும்பி வந்துட்டாங்க. முன்னாடி சொன்ன பொய்யெல்லாம் இப்போ எனக்கே வினையா வந்து மாட்டுது” என புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது மனோஜ் பார்லருக்கு வருகிறார். அப்போது கடையின் பெயர் மாற்றப்பட்டிருப்பதை பார்க்கிறார். என்ன ”ரோகினி இது அம்மா பேர்ல தானே பார்லர் இருந்தது வேற எதோ பேர்ல இருக்கு” என கேட்கிறார்.

இந்த ஃபீல்டுல நான் சீக்கிரம் முன்னேறுறேனு எல்லோரும் என்ன தான் கவனிச்சிக்கிட்டு இருக்காங்க” என்கின்றார் ரோகிணி. மேலும் தான் பார்லரை க்ரீன் பராண்டுக்கு ஃப்ரான்சிஸ் கொடுத்திருப்பதாக சொல்கிறார். இதனால் நிறைய ப்ராஃபிட் கிடைக்கும் என ரோகினி சொல்கிறார். இதைக்கேட்டு மனோஜும் சந்தோஷப்படுகிறார். பின் இதை வீட்டில் சொல்வதாக சொல்லி விட்டு மனோஜ் செல்கிறார்.

இந்த விஷயத்தை மனோஜ் விஜயாவிடம் வந்து சொல்ல இதைக் கேட்டு முத்து நக்கலாக சிரிக்கிறார். அந்த நேரத்தில் ரோகிணியும் பின்னாடியே வந்து சமாளிக்கிறார். அதற்கு முத்து அப்போதைக்கு பூக்கடை ஒன்னு தான் அம்மா பேர்ல இருக்கா? என்று பிரச்சனையை பெரிசு படுத்துகிறார். அதோடு மீனாவிடம் நீ கூட வேற பெயரை மாற்றி வைத்துக்கொள் மீனா என்று சொல்ல அதற்கு மீனா எப்பவுமே அத்தை பேர்ல தான் நம்ம கடை இருக்கும் என்று சொல்கிறார்.

அதற்கு ரோகிணி இன்னும் கொஞ்சம் நாளில் புது பார்லர் ஆரம்பித்து அதுக்கு உங்க பேரை தான் வைக்க போறேன் என்று ஐஸ் வைக்க அதற்கு விஜயா எல்லாரும் முன்னாடியும் ரோகிணி எது செஞ்சாலும் சரியாக இருக்கும். அவாதான் என் பெயரில் முதல்ல ஆரம்பிச்சா மத்தவங்க எல்லாம் அதை பார்த்து சூடு போட்டுக்கிட்டாங்க என்று சொல்லிக்கொண்டு ரூமிற்க்கு போக பின்னாடியே ரோகிணியும் சென்று உங்களுக்கு என் மேல கோபம் இல்லையே அத்தை.. நான் பயந்துட்டேன் என்று சொல்ல,

அதற்கு கோபமான விஜயா உன் மேல வருத்தம் இல்லபயங்கரமாக கோபத்தில் இருக்கிறேன் என்று கொந்தளிக்கிறார். அதோடு யாரை கேட்டு பெயரை மாற்றின. அந்த பார்லர்எப்படி திறந்தேன்னு மறந்து போச்சா? வீடு வீடா போய் மசாஜ் பண்ணிட்டு இருந்த உனக்கு நான் தான் பணம் கொடுத்தேன். அப்படி இருக்கும்போது உன் மனசுல நீ என்ன நெனச்சிட்டு இருக்க, இன்னும் எத்தனை விஷயத்தை நீ என்கிட்ட சொல்லாம மறைச்சிருக்க இனி ஏதாவது மறைச்சிருக்கேன்னு தெரிஞ்சா அவ்வளவுதான் என்று மிரட்டுகிறார்.