விஜயாவை அவமானாம்படுத்திய சுருதி அம்மா… எல்லாத்துக்கு காரணம் ரோகினி தான்… ரோகினி மீது உச்சகட்ட கோபத்தில் விஜயா…

0
Follow on Google News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை. தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், ஸ்ருதிக்கும், ரோகிணிக்கும், ஒரே நாளில் தாலி பிரித்து கோர்க்க ஏற்பாடுகள் நடந்துள்ளது. இந்த நிகழ்வுக்கு மலேசியாவில் இருக்கும் ரோகினி அப்பா வந்தே ஆக வேண்டும் என உறுதியாக சொல்லிவிட்டார் மாமியார் விஜயா.

தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்வு தடபுடலாக நடக்க, ரோகினி உங்க அப்பா எங்க என தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகிறார் விஜயா. இந்நிலையில் ரோகிணி தன்னை பற்றிய உண்மை வெளியே வந்து விட கூடாது என்பதில் குறியாக இருப்பதால், முத்துவை குடிக்க வைத்து ஏதேனும் பிரச்சனையை வெடிக்க வைக்க வேண்டும் என திட்டம் போடுகிறார்.

அதைப்போல் ஸ்ருதியின் அப்பா – அம்மாவும் முத்து மூலம் ஏதாவது பிரச்சனையை இந்த பங்க்ஷனில் உண்டு பண்ணி, தன்னுடைய மகள் – மருமகனை தங்களுடைய வீட்டிற்கு அழைத்து சென்று விட வேண்டும் என திட்டம் போடுகின்றனர். அதே நேரம், மீனா… முத்துவால் எந்த ஒரு பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார். முத்துவிடம் இந்த இடத்தை விட்டு எங்கேயும் போகக்கூடாது என்று கண்டீஷன் போட்டு… அவருடனே அமர்ந்துள்ளார்.

எனவே முத்துவால் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா? அல்லது பிரச்சனை செய்ய துடித்து கொண்டிருப்பவர்களே… வேறு ஏதாவது பிரச்சனையில் சிக்குவார்களா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா முறைப்படி ஸ்ருதி உடல் முழுவதும் தங்க நகைகள் அணிந்து ஃபங்ஷனுக்கு தயாராகிறார். இதை பார்த்து ரோகினியின் தோழி அங்க, ஸ்ருதி கேரள முறைப்படி நிறைய நகை எல்லாம் போட்டுட்டு இருக்காங்க. நீ போட்டிருக்க நகையை பார்த்துட்டு உன் மாமியார்… உன்னை ஏதாவது கேட்க போறாங்க என சொல்ல, நான் தயார் செய்த ஆள் வந்து விட்டாரா? எப்படியாவது அவன் முத்துவை குடிக்க வைக்கணும் என்று சொல்லி, தன்னுடைய பிளானை ஒர்க்அவுட் செய்ய பார்க்கிறார்.

இது ஒரு புறம் இருக்க மாலையால் புது பிரச்சனை ஒன்று விஜயா மற்றும் ஸ்ருதியின் அம்மாவுக்கு இடையே ஏற்படுகிறது. விஜயா ஸ்ருதிக்காக ஒரு ரோஜா மாலை வாங்கி வந்து போட்டுக் கொள்ள சொல்கிறார். ஸ்ருதியின் அம்மா துளசி மாலையை கொண்டு வந்து கொடுத்து போட சொல்கிறார். இதனால் இந்த மாலையை தான் போட வேண்டும் என விஜயாவுக்கும் ஸ்ருதியின் அம்மாவுக்கும் இடையே வாக்குவாதம் வருகிறது.

”நீங்க உங்க வீட்ல நடக்கும் போது இந்த மாலையை போட்டுக்கோங்க. இது நாங்க அரேஞ் பண்ணி இருக்க பங்ஷன்” என்கிறார் ஸ்ருதியின் அம்மா. ”என்ன சம்மந்தி இப்டி சொல்லி காட்டுறீங்க” என்கிறார் விஜயா. ”என் பொண்ணு நான் சொல்றத தான் செய்வா” என ஸ்ருதியின் அம்மா சொல்கிறார். உடனே ஸ்ருதி ”என்ன பண்ணிக்கிட்டு இருக்கிங்க ரெண்டு பேரும். என்னை சிலை மாதிரி நடுவுல நிக்க வச்சிட்டு ரெண்டு பேரும் ஆர்கியூ பண்ணிக்கிட்டு இருக்கிங்க, எந்த மாலையை போடணும்னு நான் தான் டிசைட் பண்ணனும்” என ஸ்ருதி ஸ்ருதி இரண்டு மாலையையும் வாங்கி கழுத்தில் போட்டு கொள்கிறார்.

இந்த மாலை விவகாரத்தில் சுருதி அம்மாவுக்கும் விஜயாவுக்கு இடையில் நடந்த சண்டையில், சுருதி அம்மா என்னை மதிக்கவில்லை, இதற்கெல்லாம் காரணம் ரோகினி தான் என ரோகினி பக்கம் திருப்ப, ஆண்டி நான் என்ன செய்வேன், உங்க அப்பா மலேசியாவில் இருந்து வந்து சுருதி விட நீ பெரிய பணக்கார வீட்டு பெண் என்பதை வெளிப்படுத்தி, எனக்கும் தகுந்த மரியாதையை கொடுத்த சுருதி அம்மா ஆட்டம் அடங்கும் என்கிற சுருதி அம்மா மீது உள்ள கோபத்தில், எங்கே உங்க அப்பா என தொடர்ந்து டார்ச்சர் செய்ய தொடங்க இருக்கிறார் விஜயா.

அந்த வகையில் முத்துவால் இந்த நிகழ்ச்சியில் பிரச்சனை வருமா அல்லது, இந்த நிகழ்ச்சியால் ரோகினி மிக பெரிய பிராடு என விஜயா மற்றும் குடும்பத்தினரிடம் மாட்டி கொள்வாரா.? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது..