மூன்று பார்ட்டாக வரும் சங்கரின் புதிய படம் .. தமிழனின் வரலாற்று கதை.!!

0
Follow on Google News

பாகுபலி படத்திற்கு பின்பு வரலாற்று கதையை படமாக்குவதில் முன்னணி இயக்குனர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இதற்கு முன்பு வரலாற்று கதைகளை படமாக்குவதற்கு சற்று தயக்கம் காட்டி வந்த பிரபல இயக்குனர்களுக்கு பாகுபலி படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றவரும் அவர்களுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக கல்கி எழுதிய நாவலை தழுவி மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ள படம் பொன்னியின் செல்வன், இந்த படம் வெளியாகி ஒரு மாதங்கள் கடந்தும் கூட இன்னும் அதன் வசூல் வேட்டையை நிறுத்தவில்லை. இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மணிரத்தினத்தை தொடர்ந்து தற்பொழுது வரலாற்று கதையை மையப்படுத்தி மிக பெரிய செலவில் பிரம்மாண்டமாக படம் எடுக்கும் முயற்சியில் இயக்குனர் சங்கர் இறங்கியுள்ளார். தற்பொழுது தெலுங்கு நடிகர் ராம்சரண் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் இந்தியன் 2 இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார் சங்கர்.

இந்த இரண்டு படத்தை முடித்துவிட்டு கம்யூனிஸ்ட் எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேல் பாரி நாவலை தழுவி சுமார் 1000 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக சங்கர் எடுக்க உள்ள படம் வேள்பாரி. இந்த படம் 3 பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.