மத்திய அரசு விருது குறித்து செந்தில்குமார் எம்பி கிண்டல் …தரமான பதிலடி கொடுத்த பார்த்திபன்.. இந்த அசிங்கம் உங்களுக்கு தேவையா செந்தில்குமார் எம்பி.?

0
Follow on Google News

நேற்று தேசிய விருது வாங்கிய நடிகர் பார்த்திபன் அவர்களிடம் இதற்கு முன் வம்பிழுத்து திமுக எம்பி செந்தில்குமார் தக்க பதிலடி பெற்ற சம்பவம் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் உருவான ஒத்த செருப்பு படத்திற்கு மத்திய அரசு விருது அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது, இதனை தொடர்ந்து பார்த்திபன் பாஜகவில் இணைய இருப்பது போன்று “அண்ணனுக்கு பாஜாக-வுல ஒரு சீட் பார்சல்” என செந்தில்குமார் எம்பி தனது டிவீட்டரில் பதிவு செய்திருந்தார்.

இதற்கு பதிலடி தரும் விதத்தில், நடிகர் பார்த்திபன் தனது டிவீட்டர் பக்கத்தில், ‘இரவின் நிழல்’என்ற சவால்மிகு திரைப்படம் உருவாக்குவதைத் தவிர,வேறெந்த கட்சிக்குள்ளும் காட்சி தரும் எண்ணம் எனக்கில்லை!நாளையே மழை வரலாம்,வரும்வேளை குடை மலரலாம். அதற்காக வானிலை அறிக்கை கேட்கும் போதே ஜலதோஷம் பிடித்து விட்டதாக மூக்கை சீந்த வேண்டிய அவசியமில்லை! மலரும் என்ற வார்த்தைப் பிரயோகத்தால் தாமரையைக் கருப்பாக கற்பனை செய்ய வேண்டாம்.அது ஒரு கொக்கி வார்த்தை.

பாரா’ளுமன்ற உறுப்பினர் திருமிகு Dr S செந்தில்குமார் அவர்கள் “அண்ணனுக்கு பாஜாக-வுல ஒரு சீட் பார்சல்” என்று sweet-ஆக tweet-ட்டிருக்கிறார்.செந்தில்குமார் அண்ணனுக்கு நான் நன்றியை பார்சல் செய்வதற்குள் அவரது comment box-ல் நிரம்பி வழிகிறது வசவுகள், தொகுதி மேம்பாட்டுக்கு பயன்படும் நேரத்தில் கீழ்தரமான comment போட்டதால்,நெட்டிசன்கள் மீம்போட்டு மேம்பாட்டு பணியில் அசிங்கப்படுத்துகிறார்கள் அவரை.

அதலொன்று ‘MPஅண்ணனுக்கு ஒத்த செருப்பு பார்சல்’ என்பதெல்லாம் அநாகரிகம்.நாமும் அப்படி கீழிறங்கக்கூடாது.sorry for that)அவர் படம் பார்க்கவில்லை என்றால் Netflix-ல் பார்க்கலாம் ்அல்லது ஒரு DVD பார்சல் செய்யலாம். திருச்சி பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை இவன் ‘ படத்தில் “seat குடுத்தா நிப்பீங்களா?”என என்னிடம் கேட்க,“ Seat குடுத்தா ஏன் நிக்கனும்? உக்காரலாமே?’என இன்றுவரை joke-க்கி விட்டு மட்டும் நகர்கிறேன்.

சினிமாவில் இன்னுங்கொஞ்சம் stand செய்ய வேண்டும் என்பதால் வேறு எங்கும் நிற்பதில்லை எதிலும் சேர்வதில்லை.மற்றபடி மக்கள் பணிகளில் ஆர்வமுண்டு ஆனால் அதற்கு பெயர்தான் அரசியலா?என அறியாதவன் அடியேன்! உண்மையான நேர்மையான சுய சிந்தனையிலும் சுய வருமானத்திலும் கடுமையான உழைப்பிலும் உருவான ஒத்த செருப்புக்கு தகுதியின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும் விருதினைக் கொச்சைப் படுத்தினால் மனம் வலிக்கும்

உரியது கிடைக்காத போது ஆனந்த’மாய் தூக்கி எறிந்து விட்டு மேடை இறங்குவேனேத் தவிர,அதைத் “தா”இதைத் “தா” வென மரை’முகமாக என் முகம் மலரமாட்டேன்!அரசியலில் மோதிப் பார்க்கலாம் என முடிவெடுத்து விட்டால் அதை பேராண்மையுடன் செய்வேன். உசுப்’பேத்தாதீங்க பாஸ் என பார்த்திபன் தெரிவித்திருந்தார், எம்பி செந்திகுமார் இந்த கருத்துக்கு மக்கள் மத்தியில் கடும் எதிப்பு கிளம்பியது குறிப்பிடதக்கது.

சூர்யா, விஜய் சேதுபதி, திராவிட குஞ்சு சித்தார்த்… தம்பிகளா எங்கடா போனீங்க.?