மருத்துவமனையில் எஸ்.ஏ.சந்திரசேகர்…. என்ன தான் இருந்தாலும் விஜய் இப்படி செய்யலாமா.?

0
Follow on Google News

நடிகர் விஜய்யின் இன்றைய சினிமா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்க கூடியவர்கள் அவருடைய தாய் மற்றும் தந்தை தான் என்பதை மறுக்க முடியாது, இந்த நிலையில் தாய் , தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களாக தாய் மற்றும் தந்தையுடன் விஜய் பேசாமல் இருந்து வந்த விஜய், விஜய் மக்கள் மன்றம் தொடர்பாக விஜய் மற்றும் SA சந்திரசேகர் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடதக்கது.

தாய், தந்தை இருவரையும் கண்டுகொள்ளாத விஜய், இதற்கு முன்பு SA சந்திரசேகர் 80வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதில் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் யாருமே கலந்து கொள்ளவில்லை, அதே போன்று கடைசியாக நடந்த விஜய் பிறந்தநாள் அன்றும் அவருடைய தந்தை, தாய் யாரையும் நேரில் சந்தித்து விஜய் ஆசிர்வாதம் வாங்கவில்லை.

இப்படி தொடர்ந்து தன்னை பெற்று, வளர்த்து ஏணியாக இருந்து மிக பெரிய உயரத்திற்கு ஏற்றி விட்ட தாய் தந்தையிடம் முரண்பாடுடன் இருந்து வரும் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் வாரிசு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் முன் வரிசையில் அமர்ந்து இருந்த முக்கியஸ்த்தர்கள் அனைவர்க்கும் வணக்கம் வைத்துக்கொண்டே வருகிறார் விஜய்,

அவர்கள் அனைவரும் எழுந்த நின்று விஜய்க்கு வணக்கம் வைக்கிறார்கள், அவர்களுடன் பத்தோடு பதினொன்றாக விஜய் தாய் விஜய்யை பார்த்து வணக்கம் வைக்கிறார், ஆனால் விஜய் தன்னுடைய தாயையும் பத்தோடு பதினொன்றாக கூட்டத்தோடு கூட்டமாக வணக்கம் வைத்து விட்டு கடந்து செல்கிறார். ஆனால் விஜய் தன் அருகில் வரும் பொழுது, தன்னுடைய மகன் தன்னிடம் ஒரு வார்த்தை பேசுவாரா என்கிற ஏக்கம் தாய் சோபா கண்ணில் தெரிகிறது,

ஆனால் மகன் தன்னை கூட்டத்தில் ஒருவர் போன்று வணக்கம் வைத்து கடந்து செல்லும் போது அந்த தாய் முகம் வாடியதை பார்ப்பவர்கள் கண் கலங்க வைத்து விடுகிறது இந்த சம்பவம். இதனால் கடும் விமர்சனம் விஜய் மீது எழுந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய தாயை விஜய் சந்தித்த புகைப்படம் வெளியானது, ஆனால் இதுவரை விஜய் அவருடைய தந்தையிடம் சமாதனம் ஆக வில்லை என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு வீடியோ ஒன்று பேசி வெளியிட்டுள்ளார், அதில் “நான் எப்போதுமே சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடன் தான் இருப்பேன். எல்லோருமே என்னை இந்த வயதிலும் எப்படி என்று பாராட்டுவார்கள். ஆனால், இரண்டு மாதங்களாக எனக்கு ஏதோ ஒரு மாதிரியாகவே இருந்தது. எனக்கே முன்பு போல் என்னுடைய உடம்பு இல்லையோ என்று தோன்றியது.

இதனால் நான் உடனே மருத்துவர் அணுகினேன். அவர் எனக்கு ஸ்கேன் டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்க்கும்போது ஒரு சின்ன பிரச்சனை ஆப்ரேஷன் செய்யணும் என்று சொன்னார். சரின்னு சொல்லி ஆப்ரேசன் செய்தேன், இரண்டு நாட்களிலேயே நான் குணமாகி விட்டேன். தற்போது நன்றாக இருக்கிறேன் என எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே வெளிநாடுகளில் இருந்து வந்த நடிகர் விஜய் தற்பொழுது தான் சென்னை திரும்பியுள்ளார், அந்த வகையில் எஸ்.ஏ.சந்திரசேகர் மருத்துவமனையில் ஆப்ரேசன் செய்து கொண்ட காலகட்டத்தில் அவருடைய மகன் விஜய் வெளிநாட்டில் தான் இருந்திருக்க வேண்டும் என்றும், என்ன தான் தந்தை மீது கருத்து வேறுபாடு இருந்தாலும் அவர் மருத்துவமனையில் ஆப்ரேசன் செய்து கொண்ட கலகட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகனான விஜய் அருகிலே இருந்து பார்த்து கொண்டிருக்க வேண்டும்,

ஆனால் தற்பொழுது விஜய் லியோ படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவுக்காக வெளிநாட்டில் இருந்து சென்னை வந்துள்ளதாக கூறப்படும் நிலையில், சமீபத்தில் ஆப்ரேசன் செய்து கொண்ட தந்தையை நேரில் சென்று நலம் விசாரிப்பாளரா.? அல்லது கண்டு காணாமல் கடந்து சென்று விடுவாரா என சினிமா வட்டாரத்தில் விவாத பொருளாக பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.