ரசிகர் ஒருவர் தற்கொலை…. மேலும் ஒரு ரசிகர் தற்கொலை மிரட்டல்…! என்ன செய்ய போகிறார் பிரபாஸ்..

0
Follow on Google News

ஆந்திரா : நடிகர் பிரபாசுக்காக கே.ஜி.எப் சீரிஸ் இயக்குனருக்கு ரசிகர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரசிகரின் அந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. அந்த கடிதத்தின் கடைசி சில வார்த்தைகள் ரத்தநிறத்தில் எழுதப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு சினிமா உலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிவைத்திருப்பவர் நடிகர் பிரபாஸ். இந்தியாவெங்கும் குறிப்பாக தமிழகத்தில் அவருக்கு ஒரு ரசிகர் கூட்டமே உண்டு. இந்நிலையில் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாசுக்கு உலகமெங்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது.

பாகுபலி திரைப்படங்களுக்கு அடுத்து வந்த சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாய் அமைந்ததோடு அந்த திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸிலும் பயங்கரமாக சொதப்பியிருந்தது. இதைத்தொடர்ந்து கே.ஜி.எப் இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் சாலார் திரைப்படத்தில் பிரபாஸ் நடித்துவருகிறார்.

இந்நிலையில் பிரபாஸின் ரசிகர் ஒருவர் எழுதியுள்ள கடிதத்தில் ” சாஹோ, ராதே ஷ்யாம் படங்களின் போது இதுபோல பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த மாதம் சாலார் படம் பற்றிய தகவல்கள் அப்டேட்டுகள் எங்களுக்கு கிடைக்கவில்லையென்றால் நான் உறுதியாக தற்கொலை செய்துகொள்வேன்” என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தற்கொலை கடிதத்தில் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர் பிரசாந்த் நீல் ஆகியோரை குறிப்பிட்டு மிரட்டல் விடுத்துள்ளார். ஏற்கனவே பிரபாஸின் கடந்த திரைப்படமான ராதே ஷ்யாம் தோல்வியால் அவரது தீவிர ரசிகரான ரவிதேஜா என்பவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது மேலும் அதிர்ச்சி தரும் விஷயம். இதனால் திரையுலகம் பரபரப்புக்குளாகியிருக்கிறது.

ரஜினிக்கு கிட்னி தானம் செய்தவர்க்கே இந்த நிலைமையா.? நன்றி உணர்வு இல்லாத ரஜினி குடும்பம்.. என்ன தெரியுமா.?