கேரள தங்க கடத்தலில் தமிழகத்தை சேர்ந்த சினிமா குடும்பம்.! தாவூத் இப்ராகிம் தொடர்பில் இயங்கும் அந்த சினிமா பிரபலம் யார் தெரியுமா.?

0
Follow on Google News

கடந்த 2020 ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தியில் நடைபெறும் பூமி பூஜைக்கு முன், இந்தியாவில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்த இந்த நாசவேலையினை தடுக்கும் முயற்சிகளில் உளவுத்துறை தீவிரமாக இறங்கிய போது, கேரளாவில் தங்கம் கடத்தும் கும்பல் சிக்கியது. இதனைத் தொடர்ந்து தங்க கடத்தல் மூலம் தேச விரோத சக்திகளுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. உடனே இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து தங்கம் கடத்தல் வழக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக அதிகாரிகள் உதவியுடன் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் என்பவரிடம் நடத்திய விசாரணையில் , கேரளா முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சட்டமன்ற சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோரின் உதவியுடன் தங்கம் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வழக்கு தற்போது சினிமா நட்சத்திரங்கள் பக்கம் திருப்பியுள்ளது, தங்க கடத்தலில் வரும் பணத்தில் ஒரு பகுதி சினிமா துறையில் முதலீடு செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தேசிய புலனாய்வு அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில் முக்கிய அரசியல் மற்றும் சினிமாத் துறையை சேர்ந்த புள்ளிகள் இதில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த பணபரிமாற்றம் கேரளாவை விட தமிழகத்தில் தான் அதிகமாக சுழன்று வந்துள்ளதாக தெரியவந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் முக்கியமாக சினிமா துறையில் ஊடுருவியுள்ள அந்த முக்கிய புள்ளிகள் யார் என்பது அடுத்தடுத்து நடத்தப்படும் விசாரணையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் கடத்தல், ஹவாலா பணம் பரிமாற்றம் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பலின் தலைவனாக இருந்து வந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம். தற்போது தாவூத் இறந்து விட்டதாக கூறப்படும் நிலையில், கிலோ கணக்கில் கடத்த பட்ட தங்கம் கடந்த ஆண்டு கேரளாவில் சிக்கியுள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமா துறையில் தாவூத் இப்ராஹிம் தொடர்பில் இருக்கும் நடிகை நடிகர் யார் என்கிற தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளிடம் இருக்கும் பட்டியலில் உள்ளவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

மேலும் அவர்கள் மற்றும் அவர்களின் குடும்பம் சார்ந்த வங்கி கணக்குகள் ஆராயப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஒரு நடிகை தாவூத் கும்பலுக்கு மிக நெருக்கமான உறவு என இதற்கு முன்பே பரவலாக கூறப்பட்டு வந்த நிலையில், அந்த நடிகையின் குடும்ப உறுப்பினர்களுக்கும் கேரள தங்க கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் அந்த நடிகையின் குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்படும் அறக்கட்டளைகளின் வங்கி கணக்குகள், கடந்த நான்கு வருடங்களில் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் நடத்தும் அறக்கட்டளைக்கு எங்கிருந்து பணம் பரிவர்த்தனை நாடடைபெற்றது என விசாரணையை இறங்கியுள்ளது தேசிய புலனாய்வு அமைப்பு.