2022ல் வெளியாகும் பொன்னியின் செல்வன்…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல இயக்குனரான மணிரத்னம் “பொன்னியின் செல்வன்” படத்தை இயக்கி வருகிறார். இந்தக் கதையை கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” வைத்து இயக்கப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் மாற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்து வருகின்றனர். இத்திரைப்படத்தில் நடிகர் சரத்குமார், விக்ரம், கார்த்திக், போன்ற பல பிரபல நடிகர் கொண்டு உருவாக்கப்படுகிறது.

இந்த பிரம்மாண்டமான சரித்திரப் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானின் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் முதல் கட்டத்தை முடித்துவிட்ட படக்குழுவினர், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நேற்று பாண்டிச்சேரியில் தொடங்கியுள்ளனர். பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு முடிந்துவிட்டது ஹைதராபாத் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் ஐந்து பாகமாக விடப்பட்டுள்ளதால் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வரும் மணிரத்னம் ஒரு பாகமாக இயக்கிறாரா? அல்லது இரண்டு பாகமாக எடுக்கிறாரா? என்றக் குழப்பம் ரசிகர்களிடம் வந்தது. அதை போக்கும் விதமாக நேற்று படக்குழுவினர் பொன்னின் செல்வன் போஸ்டரை வெளியிட்டனர்.

அதில் PS-1 (பொன்னியின் செல்வன் ஒன்றாம் பாகம் 1) என்று வெளிவந்துள்ளது. இதன்மூலம் வடக்கிலுள்ள அதிகாரப்பூர்வமாக 2 பாகமாக இயக்குவது உறுதியாகியுள்ளது. படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில் போஸ்ட் புரோமோஷன் வேலை மட்டுமே உள்ளதால் 2022ல் வெளியாவது உறுதியாகியுள்ளது.