இமான் மனைவி விவகாரம்… சிவகார்த்திகேயன் அடிமடியில் கை வைத்த கமல்ஹாசன்..

0
Follow on Google News

மனம் கொத்திப் பறவை, எதிர்நீச்சல், வருத்தபடாத வாலிபர் சங்கம் என பல்வேறு படங்களில் வரிசையாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்த சிவகார்த்திகேயன் தற்போது உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படியான நிலையில், நடிகர் கமலஹாசன் நேரம் பார்த்து காலை வாரும் விதமாக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பெரிய ஆப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தொலைகாட்சியில் பயணத்தை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் படிப்படியாக உயர்ந்து வெள்ளித் திரையில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் படம் என்றாலே, காமெடியும் காதலுமாய் கலகலவென இருக்கும் என்பதாலேயே பேமிலி ஆடியன்ஸ் விரும்பிப் பார்ப்பார்கள். குறிப்பாக, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ போன்ற படங்கள் மூலம் குழந்தைகளின் மனதில் இடம்பிடித்தார்.

அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், சம்பாதித்த பணத்தை வைத்து SKProduction என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் கொடுத்தாலும், வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர். லோக்கல், பிரின்ஸ் போன்ற படங்கள் வரிசையாக எதிர்பார்த்த வெற்றியைத் தராமல் போனது. இதனால் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்படம் வெற்றியை பெற்று தந்தது. இதனால் மீண்டும் சிவகார்த்திகேயன் உற்சாகத்துடன் நடிக்கத் துவங்கியுள்ளார்.

ஏற்கனவே, இவர் நடித்துள்ள அயலான் படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏலியன் தொடர்பான கதை என்பதால், ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்து வருகிறது. எனவே, சிவகார்த்திகேயனும் அயலான் படத்தின் ரிலீசுக்காக எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல், தற்போது கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். இப்படி அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி பயணித்து வரும் சிவகார்த்திகேயன், அண்மையில், இசையமைப்பாளர் இமான் மனைவி விவகாரத்தில் சிக்கி, அவரது மொத்த இமேஜும் நாசமாகி போனது.

மேலும், இமான்-சிவகார்த்திகேயன் இடையேயான சர்ச்சையினால் சிவகார்த்திகேயனின்அடுத்தடுத்த படங்களின் வெற்றி பாதிக்கப்படும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். எல்லோரும் சொல்வது போல, இமான் மனைவி சர்ச்சையினால் சினிமா கேரியர் காலியாகி விடக்கூடாது என்று பயந்து போன சிவகார்த்திகேயன், சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்காக பத்து லட்சம் ரூபாய் காசோலையை முதல்வர் மு க ஸ்டாலினிடம் வழங்கி, இமான் பிரச்சனையை மூடி மறைத்து விடலாம் என்று திட்டமிட்டு இருந்தார். ஆனால், சிவகார்த்திகேயன் போட்ட திட்டம் பலிக்கவில்லை, இதனால் அவர் அப்செட் ஆகி விட்டதாக சொல்லப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், பட்ட காலிலே படும் என்ற கதையாக தற்போது மீண்டும் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளார். அதாவது, பட குழுவினர் காஷ்மீரில் 60 நாட்களில் முடிக்கவேண்டிய இப்படத்தின் படபிடிப்பினை 90 நாட்கள் வரை கொண்டு சென்றுள்ளனராம். அதனால் படத்தின் பட்ஜெட் எகிறியுள்ளதாம். இதனால் அப்செட் ஆன நடிகர் கமலஹாசன், பட்ஜெட்டை சரி செய்ய சிவகார்த்திகேயனின் சம்பளத்தில் கை வைத்திருக்கிறாராம். இருக்கிற பிரச்சனையில, இப்படி சம்பளத்தையும் புடிச்சுக்கிறாங்களே என்று சிவகார்த்திகேயன் மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே, இசையமைப்பாளர் இமான் பிரச்சனையில் அடி வாங்கி நொந்து போன சிவகார்த்திகேயன் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் வச்ச ஆப்பினால் சினிமா கரியர் சின்னா பின்னமாகி விடுமோ என்ற அச்சத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.