அப்படி செய்கின்றவர்கள்… ஆண்மை இல்லாதவர்கள்.. கடுமையாக கொந்தளித்த இளையராஜா…

0
Follow on Google News

ஒரு தமிழ்ப் படத்தைப் போல் தமிழ்நாட்டில் பட்டிதொட்டியெங்கும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மலை யாளத்தின் சூப்பர் ஸ்டார்களோ, ஸ்டார் இயக்குநர்களோ இல்லாத ஒரு படம்! அது கைக்கொண்ட கதைக்காக, புத்திசாலித்தனமான உருவாக்கத்துக்காக விமர்சன ரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

சுமார் நான்கு கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இப்படம், 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. மலையாளத்தில் சமீப காலமாகச் சிறிய பட்ஜெட் படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுவருகின்றன. நட்சத்திர அந்தஸ்து சிறிது சிறிதாக மங்கி வருவதன் அறிகுறி இது. இப்படத்திற்கு தமிழர்கள் மத்தியில் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்ததற்கு காரணம் கமல்ஹாசனின் குணா படம்.

கமல்ஹாசனின் குணா படத்தில் இளையராஜா இசையில் வரும் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலில் ‘மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது’ எனும் வரியோடு தொடங்குகிறது.‌ க்ளைமேக்சில் மீண்டும் ஒருமுறை வரும் இந்த பாடல் வரி இது வரை காதல் குறித்து பாடுவதாகவே பார்க்கப்பட்டது.

ஆனால், மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் இந்த வரி பயன்படுத்தப்பட்ட விதம் படத்தில் வரும் 11 நண்பர்களுக்கு இடையேயுள்ள நட்பை கூறும் விதமாக இருப்பதாக உள்ளது. இந்த படம் தமிழகத்தில் வெற்றியடைய இந்த பாடலும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சும்மல் எனும் சிறிய ஊரில் இருந்து 11 நண்பர்கள் தமிழ்நாட்டிலுள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றனர்.

குணா படத்தின் மூலம் பிரபலமான குணா குகையை சுற்றிப்பார்க்க சென்றபோது 11 பேரில் ஒருவர் அந்தக்குகையில் இருந்த பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்துவிட அவருக்கு என்ன ஆனது? நண்பர்களால் காப்பாற்றப்பட்டாரா? என்பதுதான் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் கதை. 2006-ம் ஆண்டு கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த படத்திற்கு இசையமைத்து, ‘’கண்மணி அன்போடு காதலன்’’ என்ற ட்ரெண்டிங் பாடலை கொடுத்த இளையராஜா இந்த படம் குறித்து இதுவரை எதுவும் பேசாத நிலையில், மஞ்ஜூமல் பாய்ஸ் படக்குழுவும் அவரை சந்தித்தாக எந்த தகவலும் இல்லை. தான் இசையமைத்த பாடல்கள் இப்போது வரும் படங்களில் பயன்படுத்தினால் அதற்கு கடுமையான விமர்சனங்களை கூறி வருபவர் தான் இளையராஜா.

இளையராஜாவின் இந்த நடவடிக்கை நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை எழுப்பியிருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 96 படத்தின் தனது பாடல்களை பயன்படுத்தியது குறித்து பேசிய இளையராஜா அவர்கள் ஆண்மை இல்லாதவர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு நெட்டிசன்கள் கடுமையாக கண்டனங்களை தெரிவித்திருந்த நிலையில், பலரும் இளையராஜா மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர்.

96 என்ற தமிழ் படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியதற்காக ஆண்மை இல்லாதவர்கள் என்று கூறிய இளையராஜா, தற்போது மஞ்ஜூமல் பாய்ஸ் என்ற மலையாள படத்தில் தனது பாடல்கள் பயன்படுத்தியுள்ளது குறித்து இதுவரை எந்த கருத்தும் சொல்லாமல் இருக்கிறார். இளையராஜாவின் இந்த அமைதிக்கு என்ன காரணமாக இருக்கும் என்பதே தற்போது நெட்டிசன்களின் கேள்வியாக இருக்கிறது.