ஒரு எம்பியாக பல லட்சம் செலவில் சத்தமே இல்லாமல் இளையராஜா செய்த சாதனை …. கொண்டாடும் மக்கள்…

0
Follow on Google News

எத்தனையோ விமர்சனங்களை எதிர்கொண்டாலும் தெளிந்த நதி போல அந்தந்த காலகட்டங்களின் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தன்னை புதுப்பித்து ஓடிக் கொண்டே இருக்கிறார் இளையராஜா. இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இசையமைத்துள்ளார். இவரது இசைதான் வேண்டும் என அவருடைய அலுவலகத்தில் பல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் காத்திருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இவர் தேசிய விருது, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளை வாங்கியுள்ளார். ஆர் யூ ஓகே பேபி படத்திற்கு இளையராஜாதான் இசையமைத்துள்ளார். இந்த படம் மக்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் என கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இளையராஜா பிஸியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு இளையராஜா, பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு அவருடைய சகோதரர் கங்கை அமரனும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு இளைஞராஜாவுக்கு நியமன எம்பி பதவி வழங்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு எம்.பி. பதவி வழங்கப்படுவது வழக்கம். அதனடிப்படையில் இசைஞானி இளையராஜாவுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து எம்.பி. இளையராஜாவிற்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு இருந்தது.

இப்படி அடுத்தடுத்து இளையராஜாவிற்கு வழங்கப்பட்டு அரசில் இருந்து கௌரவம் குவிந்து வருகிறது. அதோடு இளையராஜாவும், பிரதமர் மோடி நடத்தும் நிகழ்ச்சிகளிலும், பாஜக நடத்தும் முக்கியமான நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். தற்போது இளையராஜா அரசியலில் அதிக தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் இளையராஜா செய்திருக்கும் செயலை மக்கள் பாராட்டி வரும் தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது, தான் பிறந்த சோனா மாவட்டமான தேனீ மாவட்டம் கூடலூர் நகராட்சியில் 16 மீட்டர் உயர் கோபுர விளக்கை அமைக்கும் பணியில் இளையராஜா இறங்கி இருக்கிறார். அமைக்கும் அவர் ஒன்பது லட்சம் ரூபாய் செலவழித்து இருக்கிறார். தற்போது இது தொடர்பான புகைப்படத்தை இளையராஜா சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்து பலரும் இளையராஜாவை பாராட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் உருவாகவிருக்கிறதாம். இதற்கான கதையை இளையராஜாவே எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனுஷ் இளையராஜாவின் தீவிரமான ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் படத்தை பால்கே இயக்கவிருக்கிறார். பால்கே இயக்கிய பெரும்பாலான ஹிந்தி படங்களுக்கு இளையராஜா தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.