சங்கரை அவமானப்படுத்திய இளையராஜா… மேடையிலே வெளிப்பட்ட இளையராஜாவின் கோபம்..

0
Follow on Google News

சமீப காலமாக இளையராஜா குறித்த சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது, மறைந்த மனோ பாலாவுக்கு இரங்கல் தெரிவித்து இளையராஜா பேசியது கூட சர்ச்சையாக வெடித்தது, இப்படி இளையராஜா என்ன பேசினாலும் கூட அதில் ஒரு சில வார்தைகள் பெரும் சர்ச்சையாக உருவெடுத்து விடுகிறது.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான முதல் படம் ஜெண்டில்மேன், இந்த படத்துக்கான ஹீரோ அர்ஜுன் மற்ற கதாபாத்திரத்துக்கான நடிகர்களை தேர்வு செய்த பின்பு, இந்த படத்தின் தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமேனன் படத்தின் இயக்குனரை நேரில் அழைத்து, ஜெண்டில்மேன் படத்தின் இசை அமைப்பாளர் இளையராஜா தான், அவரை சென்று நேரில் பார்த்து, நான் அனுப்பினேன் என தெரிவித்து புதிய படம் குறித்து அவரிடம் கதையை தெரிவித்து விட்டு வா என குஞ்சுமேனன் அனுப்பியுள்ளார்.

இளையராஜா ஸ்டுடியோவுக்கு சென்ற சங்கர் அங்கே கே.டி குஞ்சுமேனன் அனுப்பி விட்டார், புதிய படத்துக்கான கதையை தெரிவித்து வர சொன்னார் என தெரிவிக்க, இளையராஜாவுக்கு சங்கர் முகத்தை பார்த்த உடனே கடும் கோபம் ஏற்பட்டுள்ளது, ஏதும் பேசாமல் இசை பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் இளையராஜா, ஸ்டூடியோ வெளியே இயக்குனர் சங்கர் காத்திருக்கிறார், ஆனால் இளையயராஜாவிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

காலை பத்து மணிக்கு சென்ற இயக்குனர் சங்கரை மாலை 3 மணிவரை காக்க வைத்து எந்த ஒரு வார்த்தையும் பேசாமல், தனது இசை பணி முடிந்ததும் ஸ்டுடியோவில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டார் இளையராஜா, அங்கே ஸ்டுடியோவில் இருந்தவர்களிடம் இளையயராஜா மீண்டும் வருவாரா.? நான் காத்திருக்க வேண்டுமா.? என சங்கர் கேட்க, அதெல்லாம் இனி வரமாட்டார் நீங்கள் புறப்பட்டு சொல்லுங்க என சங்கரை அங்கே இருந்து அனுப்பியுள்ளார்.

இளையராஜாவை நேரில் சந்திக்க சென்று அங்கே பார்க்க முடியமால் காக்க வைத்து அசிங்கப்படுத்தி அனுப்பி வைத்ததை கே.டி குஞ்சுமேனன் அவர்களிடம் சங்கர் தெரிவிக்க, இதன் பின்பு ஜெண்டில்மேன் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசைமைத்துள்ளார், படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் சூப்பர்,டூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் ஷங்கரை ஏன் இளையராஜா நேரில் பார்க்க மறுத்துவிட்டார் என்கிற தகவலை பிரபல சினிமா விமர்சகர் தெரிவித்துள்ளார்.

அதில், நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான சூரியன் படத்தின் இயக்குனர் பவித்ரன் உதவியாளராக இருந்தவர் சங்கர், சூரியன் படத்தின் இசை அமைப்பாளராக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் இளையராஜா, சூரியன் படத்தின் பாடல் மெட்டுக்களை இளையராஜா வசித்து காண்பிக்க பவித்ரன் அருகில் இருந்த அவரது உதவி இயக்குனர் சங்கர், மெட்டு சரியில்லை வேறு ஒரு மெட்டை போட சொல்லுங்க என்று கூற அதையே பவித்ரன் முன்மொழிந்துள்ளார்.

இளையராஜா இரண்டாவதாக அடுத்த மெட்டை போட அதுவும் சரியில்லை வேறு ஒரு மெட்டை போட சொல்லி சங்கர் தெரிவித்துள்ளார். மூன்றாவதாக ஒரு மெட்டை இளையராஜா போட அதுவும் சரியில்லை என அங்கே இயக்குனர் பவித்ரன் அருகில் இருந்த உதவி இயக்குனராக இருந்த சங்கர் தெரிவிக்க, டென்ஷனான இளையராஜா, ஹார்மனி பெட்டியை எடுத்து கொண்டு, நீ இயக்குனரா.?பவித்ரன் இயக்குனரா.? என கோபத்துடன் உங்கள் படத்துக்கு இசை அமைக்க மாட்டேன் என அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதன் பின்பு சூரியன் படத்துக்கு தேவா இசை அமைக்க அந்த படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இப்படி இதற்கும் முன்பு உதவி இயக்குனராக இருந்த சங்கர் -இளையராஜா இடையே நடந்த இந்த மோதல் தான் ஜெண்டில்மேன் படத்துக்காக இசை அமைக்க தன்னை தேடி வந்த சங்கரை அசிங்க படுத்தி இளையராஜா அனுப்ப காரணம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் சங்கர் பங்கேற்று இருந்தார், அப்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை ரோகிணி இயக்குனர் சங்கரிடம். நீங்களும் இளையராஜா சாரும் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று பலருக்கு ஆவலாக இருந்திருக்கும் என கேள்வி எழுப்ப.

உடனே டென்ஷனில் மேடையில் இருந்த இளையராஜா இப்படி எல்லாம் கேள்வி கேட்கக்கூடாது. நீ எனக்கு சான்ஸ் கேட்கிறீயா.? நான் இந்த கேள்வியை விரும்பவில்லை. இப்பொழுது எதற்காக இந்த விஷயத்தை எடுக்க வேண்டும். அவருக்கு கம்பேர்டபுலா இருக்கும் ஆட்களுடன் அவர் வேலை செய்கிறார் அவர எதற்காக தொந்தரவு செய்ய வேண்டும் என இளையராஜா கோபத்தில் பேசியது குறிப்பிடதக்கது.