முதல் முதலாக இந்தி படத்தை இயக்கப்போகும் மிஷ்கின்!

0
Follow on Google News

இயக்குனர் மிஷ்கின் முதல் முதலாக பாலிவுட் படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலமாக 2006 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமானார். அதையடுத்து இப்போது வரை தன்னுடைய தனித்துவமான திரைமொழியாலும், கதைக்களங்கள் மற்றும் கதாபாத்திரங்களாலும் தனித்துவமிக்க இயக்குனராக அறியப்பட்டு வருகிறார்.

இப்போது அவர் தனது இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு படத்தின் பார்ட் 2 வை இப்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்துக்கு பிறகு அவர் அருண் விஜய் மற்றும் சிம்பு ஆகியவர்களை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக இப்போது இந்தியில் ஒரு படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் கதாநாயகனாக துல்கர் சல்மான் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. துல்கர் சல்மான் பால்கி இயக்கத்தில் இரு இந்தி படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.