ரெம்ப சீப்பாக நடந்து கொள்வார்… என்னிடமும் வைரமுத்து அப்படி நடந்து கொண்டார்.. பாடகி வினைதா குற்றசாட்டு..

0
Follow on Google News

சமீபத்தில் தனது 70வது பிறந்தநாள் கொண்டாடிய கவிஞர் வைரமுத்து வசிக்கும் சென்னை பெசன்ட் நகரில் இருக்கும் அவரின் வீட்டிற்கே நேரில் சென்று வாழ்த்தினார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், இந்நிலையில் தொடர்ந்து வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டுகளை தெரிவித்து வரும் பின்னணி பாடகி சின்மயி, சமீபத்தில் வைரமுத்து 70 வது பிறந்தநாளுக்கு முதல்வர் சென்று வாழ்த்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

பாலியல் தொல்லை கொடுத்தார் என பல பெண்கள் புகார் தெரிவித்த மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க தமிழக முதல்வர் அவரின் வீட்டிற்கு சென்றிருக்கிறார் என தெரிவித்துள்ள சின்மயி, பல விருதுகள் வென்ற பாடகியும், டப்பிங் ஆர்டிஸ்டுமான என்னை, வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததை வெளிப்படுத்தியதற்காக கடந்த 2018ம் ஆண்டில் இருந்து எனக்கு தமிழ் திரையுலகில் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்த சின்மயி.

மேலும் எந்த பெண் மீதும் கை வைத்துவிட்டு தனக்கு பல அரசியல்வாதிகள் குறிப்பாக திமுகவை தெரியும் என கூறி அவர்களை அமைதியாக இருக்குமாறு மிரட்டுகின்றவர் என்றும், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் ஒவ்வொரு பிறந்தநாள் அன்று, அவரால் பாதிக்கப்பட்ட பெண்களை டேக் செய்து வயிறு எரியுதா என கேட்பதை தமிழ் பெண்ணியம் கலாச்சாரத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ள சின்மயி.

இது போன்ற ஆட்களை அரசியல்வாதிகள் காப்பாற்றுவார்கள் என்பதால் ப்ரிஜ் பூஷன், வைரமுத்து போன்றவர்கள் தப்பிவிடுவார்கள் என வைரமுத்து குறித்து சின்மயி தெரிவித்து இருந்த நிலையில், சின்மயிக்கு ஆதரவு தெரிவிக்கும்வகையிலும், மேலும் வைரமுத்து குறித்து பரபரப்பு குற்றசாட்டுகளை தெரிவித்துள்ளார் பின்னணி பாடகி வினைதா .தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை பாடியவர் பின்னனி பாடகி வினைதா.

இவர் வைரமுத்து குறித்து பேசிய வீடியோ ஒன்றில், வைரமுத்து குறித்து சின்மயி பேசிவரும் அனைத்தும் உண்மை என தெரிவித்த வினைதா, சின்மயிக்கு நடந்தது போன்று தனக்கும் நடந்தது, அதுவும் வைரமுத்துவால் தான் நடந்தது என பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வினைதா. வைரமுத்து நல்ல மனிதரே இல்லை. என்னை பாட அழைத்த வைரமுத்து, ஒரு இடத்தை சொல்லி அங்கு தனியாக வருமாறு என்னை அழைத்தார்.

வைரமுத்து எப்போதும் முகத்தை பார்த்து பேசவே மாட்டார். ரெம்ப சீப்பாக நடந்துகொள்வார். வைரமுத்து இதுபோன்று நிறைய பெண்களிடம் தவறாக நடந்துள்ளார். அது எனக்கு தெரியும். எப்போ அவரை பார்த்தாலும், வந்துட்டாண்டா என்று தான் தோன்றும்” என பின்னனி பாடகி வினைதா பேசிய வீடியோவை பகிர்ந்துள்ள சின்மயி, இதே போன்று தமிழ் கவிஞருக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்கள் பேச முன் வரவேண்டும் என சின்மயி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு பின்னணி பாடகி பாடகி புவனா சேஷன் என்பவர் வைரமுத்து மீது பரபரப்பு குற்றசாட்டுகளை முன்வைத்து எது இந்திய அளவில் விவாத பொருளாக மாறிய நிலையில், தற்பொழுது, மற்றொரு பின்னணி பாடகியான வினைத்தா என்பவர் சின்மயிக்கு ஆதரவாகவும், வைரமுத்து அபப்டி பட்ட நபர் தான், என்னை தனியாக ஒரு இடத்துக்கு வர சொன்னார் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.