பணம் கொடுத்து ஏமாற்றிய லெஜெண்ட் சரவணா…. வசமாக சிக்கி அசிங்கப்பட்ட பரிதாபம்… என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

சரவணா ஸ்டார் உரிமையாளர் அருள் சரவணன், தற்பொழுது தன்னுடைய பெயரை லெஜெண்ட் சரவணன் என்று மாற்றி கொண்டுள்ளார். தமிழக முழுவதும் தன்னுடைய கிளைகளை உருவாக்கி தமிழகத்தில் உள்ள முன்னனி தொழில் அதிபர்கள் பட்டியலில் இடம்பெற்று சாதனை படைத்து வருகின்றவர் லெஜெண்ட் சரவணா, சினிமா மீது மோகம் கொண்ட லெஜெண்ட் சரவணன் தன்னுடைய கடை விளம்பரத்தில் காலத்திற்கு ஏற்ப டாப் நடிகைகளை நடிக்க வைத்து தன்னுடைய கடைக்கு மக்களை அழைத்து வரக்கூடியவர்.

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகைகள் விளம்பர படத்தில் நடிக்க தயங்கினால் கூட, இவர் கொடுக்கும் அதிகப்படியான சம்பளத்தை கேட்டு சரவணா ஸ்டார் விளம்பரத்தில் நடிக்க முன் வந்து விடுவார்கள், ஒரு கட்டத்தில் அவரே தன்னுடைய கடை விளம்பர படத்தில் நடிக்க தொடங்கியவர், ஒரே விளம்பரத்தில் பல நடிகைகள் மத்தியில் செம்ம ஆட்டம் போடுவார், பண்டிகை நாட்கள் வந்தால் அண்ணாச்சியை கையில் பிடிக்க முடியாது என்கிற கருத்தும் உண்டு.

இந்நிலையில் தன்னிடம் பணம் இருக்கு, அதனால் எதையும் சாதிக்க முடியும் என்கிற எண்ணத்தில், சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையில் புதிய படம் ஒன்றில், பல கோடி செலவில் நடித்து வருகிறார் லெஜெண்ட் சரவணன். தன்னுடைய படத்தில் முன்னனி நடிகர் நடிகைகளை நடிக்க வைக்க வேண்டும் என விரும்பிய சரவணன், அதற்காக, மறைந்த நடிகர் விவேக், நாசர், பிரபு போன்ற பிரபல நடிகர்களை அதிக சம்பளம் கொடுத்து நடிக்க வைத்துள்ளார்.

தனக்கு ஜோடியாக நயன்தாராவை எப்படியாவது நடித்து வைத்து விட வேண்டும் என்று அதிக சம்பளம் பேசியும் கூட நயன்தாரா மறுத்துவிட்டார். இது பணத்தால் எதையும் செய்துவிட முடியும் என்று நினைத்த லெஜெண்ட் சரவணனுக்கு தகுந்த பாடமாக அமைந்தது. இந்நிலையில் லெஜெண்ட் படத்தின் டீசர், மற்றும் பாடல்கள் என தொடர்ந்து அப்டேட் வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்கள் படங்களுக்கு போன்று பில்டப் ஓவராக இருக்கிறது.

இது குறித்த தகவல் ஓன்று வெளியாகியுள்ளது. யூ டுயூப்பில் உள்ள சினிமா விமர்சகர்கள், மற்றும் சினிமா தொடர்பான ஊடகங்களுக்கு தனி தனியாக பணம் கொடுத்து தான் நடிக்கும் படத்தை பற்றி லெஜெண்ட் சரவணன் ஓவர் பில்டப் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.ஆனால் என்ன தான் பில்டப் கொடுத்தாலும் மக்கள் மத்தியில் லெஜெண்ட் படத்திற்கு எந்த ஒரு வரவேற்பும் இல்லை என்பது தான் உண்மை, லெஜெண்ட் படத்தின் பாடல்கள் யூ டுயூப்பில் அதிக வியூஸ் பெற்றுள்ளது.

இதற்கு காரணம் அந்த பாடலுக்கு அதிக செலவு கொடுக்கப்பட்ட பில்டப் தான் என்றும், இந்நிலையில் என்ன தான் பில்டப் கொடுத்தாலும் படம் வெளியான பின்பு மக்களின் கருத்து தான் வெற்றி தோல்வியை முடிவு செய்யும், மேலும் பணம் இருக்கிறது என்பதற்காக தன்னுடைய படத்தை ரஜினி பட லெவெலுக்கு பில்டப் கொடுக்க வைப்பது எல்லை மீறிய செயல் என்றும், பணம் கொடுத்து எதிர்மறை விமர்சனத்தை தடுப்பது என்பது என்று கொள்ள முடியாது என சினிமா வட்டாரதத்தில் பேசப்பட்டு வருகிறது.

ஐஸ்வர்யா ராய் தான் வேண்டும்… அடம் பிடிக்கும் ரஜினிகாந்த் … டென்ஷனில் தயாரிப்பு நிறுவனம் என்ன செய்தது தெரியுமா.?