ஜோசப் விஜய் அரசியல் என்ட்ரி…பொய் தான் பேசுவிங்களடா… நார் நாராக கிழித்த நடிகை கஸ்தூரி..

0
Follow on Google News

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை தொடங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டு இருந்தார். விஜயின் இந்த அறிவிப்பு விஜய் மக்கள் இயக்கத் தொண்டர்களையும் அவரது ரசிகர்களையும் உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியது. அதே சமயம், தான் ஒப்புக்கொண்ட படங்களை நடித்துக் கொடுத்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

விஜயின் அரசியல் வருகை அனைவரும் எதிர்பார்த்ததுதான் என்றாலும், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் தான் அவரது இலக்கா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்த வந்தது. ஆனால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் தான் இலக்கு என்றும் அறிவித்திருந்தார். விஜயின் அரசியல் தொடக்கத்திற்கு ஏராளமான ஆதரவு பெருகி வந்தாலும், சில அரசியல் தலைவர்களும் அரசியல் விமர்சகர்களும் அவர்களது கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்தனர்.

அந்த வகையில் சமூக ஆர்வலரான நடிகை கஸ்தூரி, விஜயின் அரசியல் வருகை பற்றிய தனது கருத்தை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழக வெற்றி கழகத்தில் ‘க்’ இருந்தாலும் இல்லையென்றாலும் வெற்றியை சரியா பிளேஸ் பண்ணிவிட்டார் விஜய். என்னை போல் சினிமாவில் ரசிகர்களாக இருப்பவர்கள், ரசிகர்கள் என எல்லோருமே ஒட்டுமொத்தமாக ஓட்டு போட்டு இருந்தால் விஜயகாந்த் எப்பவோ முதலமைச்சராகி இருப்பார். கமல் எம்.எல்.ஏ ஆகி இருப்பார். இதெல்லாம் நடக்கவில்லை.என தெரிவித்த கஸ்தூரி,

ஒவ்வொருவருக்கும் அத்தனை பிரச்சினைகள் இருக்கிறது. மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு 10 ஆயிரம் ரூபாய் பிரச்சனைக்கு தலையில் வைத்துக்கொண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். விஜயின் அரசியல் வருகை அனைவரும் எதிர்பார்த்ததுதான். காவிக் கொள்கை உள்ளவர்கள் பாஜகவிற்கு தான் ஓட்டு போடுவார்கள்! அவர்கள் ஜோசப் விஜய்க்கு ஓட்டு போட மாட்டார்கள் …அதேபோல சிறுபான்மையினர் திமுகவுக்கு தான் ஓட்டு போடுவார்கள்”

இதில் விஜய் காங்கிரஸ் உடன் தான் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறது. அவங்க தான் சமூக நீதி கூட்டணி. விஜய்யின் வழியில் வருபவர்கள் குறைவு. இதை நான் தவறு என்று சொல்லவில்லை. இதுதான் உண்மை என்றெல்லாம் சில விஷயங்களை பேசி இருந்தார். கஸ்தூரியில் இந்த கருத்துக்கு எக்ஸ் தளத்தில் இணையவாசி ஒருவர் கடுமையான விமர்சனத்தை தெரிவித்து இருந்தார்.

அந்தப் பதிவில் “ஜோசப் விஜய்னா சொல்ற …உனக்கு மதத்தைத் தவிர வேற அரசியல் தெரியாதா ” என்று விமர்சித்திருந்தார். பொதுவாக எக்ஸ் தளத்தில் இதுபோன்ற விமர்சனங்களும் கமெண்ட்களும் வருவது வழக்கம்தான்…அதை பலரும் புறக்கணித்து விடுவார்கள் …சிலர் பதிலடி கொடுத்து விடுவார்கள். அப்படித்தான் நடிகை கஸ்தூரியும் இவரது ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இணையவாசிக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடியில், ” விஜயை ஜோசப் என்று குறிப்பிடும் கட்சியினர் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற அரசியல் உண்மையை சொல்லி இருக்கேன் ..என் சொந்தக் கருத்தை சொல்லவில்லை ..திமுக கூட்டணிக்கு பாதிப்பு என்று சொன்னவுடன் உபி கழிசடைங்க எப்படி எல்லாம் மூட்டி விடுது பாரேன்! பொய்யை மட்டும் தான் பேசுவீங்களாடா!!!” என்று கஸ்தூரி விளாசி உள்ளார்.