எத்தனை முறை கருக்கலைப்பு.. யாருடன் கள்ள தொடர்பு..! விவாகரத்து குறித்து வேதனையுடன் மனம் திறந்த நடிகை சமந்தா..!

0
Follow on Google News

தெலுங்கு நடிகர் நாக அர்ஜுன் மகன் நாக சைதன்யா 2017ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்தும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார் சமந்தா. சினிமாவில் அவர் நடிக்கும் கவர்ச்சி காட்சிகள், மற்றும் சமந்தா அடிக்கடி வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் குடும்பத்தில் பெரும் புகைச்சலை உண்டாக்கியது. இது குறித்து மாமனார் நாக அர்ஜுன் மகன் நாக சைதன்யாவிடம் தனது வருத்தத்தை தெரிவித்ததாக கூறபடுகிறது.

இந்நிலையில் சமந்தா நடிப்பில் வெளியான வெப் சீரியஸ் ஒன்றில் படுக்கையறை கட்சியில் உச்சக்கட்ட கவர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். இது நாக அர்ஜுன் குடும்பத்தில் பெரும் பிரச்சனையாக உருவானதாக கூறபடுகிறது. இதனை தொடர்ந்து சமந்தா விரைவில் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது, மேலும் சமந்தாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கிசு கிசு எழுந்தது.

இந்நிலையில் நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டனர், அதில், “பல உரையாடல்கள் மற்று யோசனைகளுக்கு பிறகு நானும் சாய்யும் கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிந்து இருவருடைய தனிப்பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளோம்,” என்று பதிவிட்டுள்ளனர்.”பத்து வருடங்களுக்கும் மேல் எங்களுக்குள் அழகான நட்பு இருக்கிறதும் அதுவே எங்கள் உறவின் ஆதாரம். அந்த நட்பு இனியும் எங்களுக்குள் இருக்கும்.

எங்களுடைய இந்த முடிவுக்கு மதிப்பளித்து, இந்த கடினமான சமயத்தில் எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அனைவரும் மதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். உங்கள் அனைவரது அன்புக்கும் நன்றி,” என இருவரும் ஒரே சமயத்தில் இதனை தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் இருவரும் தெரிவித்தனார். இதனை தொடர்ந்து சமந்தா தற்போது குழந்தை பெற்று கொள்ள விருப்பம் இல்லாமல் கருவை கலைத்ததாகவும்.

மேலும் இயக்குனர் ஒருவருடன் தொடர்பு இருப்பது நாக சைதன்யாவுக்கு தெரிந்ததும் இவர்கள் விவாகரத்து செய்து கொண்டதாகவும். பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், இது குறித்து மனம் திறந்த சமந்தா, என் மீது அக்கறை காட்டுபவர்களுக்கும் என்னை பற்றி வரும் வதந்திகளை எதிர்த்து நிற்பவர்களுக்கும் நன்றி. நான் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறேன், எனக்கு குழந்தை வேண்டாம் என்றும், நான் கருகலைத்துள்ளேன் போன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

விவாகரத்து என்பதே வலிமிகுந்தது. நான் இதிலிருந்து மீண்டு வர நேரம் தேவைப்படுகிறது. என் மீதான இந்த தனிப்பட்ட தாக்குதல்கள் தொடரத்தான் செய்யும். ஆனால், இதனை இனியும் அனுமதிக்கமாட்டேன். அவர்கள் கூறும் எதுவும் என்னை உடைக்காது என்பதை உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் என சமந்தா தெரிவித்துள்ளார்.

சிவன் சொத்து குல நாசம், திமுகவை எதிர்த்து துர்கா ஸ்டாலின் தலைமையில் பாஜகவின் அடுத்த ஆர்ப்பாட்டம்.. திருச்சியில் நடத்த பாஜக ஆர்பாட்டத்தில் பேராசிரியர் பேச்சு…