சினிமாவில் காணமல் போயிருவீங்க.. அந்த நடிகருக்கு நடந்தது தான் உங்களுக்கும்.. நடிகர் சூர்யாவுக்கு வந்த எச்சரிக்கை.!

0
Follow on Google News

நடிகர் சித்ததார்த் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து தற்போது சினிமா துறையில் இருந்து துடைத்து எறியப்பட்டுள்ளார். சினிமாவில் நடிகர் சித்தார்த்துக்கு மிக பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் எதோ கிடைக்கும் கதாபாத்திரத்தில் நடிப்பது, விளம்பர படங்களில் நடிப்பது என தனது பொழப்பை ஒட்டி கொண்டிருந்த சித்தார்த். உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து விளம்பர பட வாய்ப்புகளை இழந்தார்.

தற்போது இந்திய வீராங்கனை சானியா நேவால் குறித்து ஆபாசமாக பாலியல் ரீதியாக கருத்து தெரிவித்து ஒட்டு மொத்த இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக இனி சித்தார்த் நடிப்பில் படம் வெளியான அது மக்கள் மத்தியில் கடும் எதிப்பை தான் பெற்று தரும் என்பதால். இனி அவருக்கு பட வாய்ப்புகள் வருவது சந்தேகம் என்கிற சூழல் உருவாகி, தற்போது தனது சினிமா வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் நடிகர் சித்தார்த்.

இந்நிலையில் சித்தார்த் போன்று பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வருகின்றவர், நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி நடிகை ஜோதிகா. இந்நிலையில் தற்போது சித்தார்த் விவகாரம் இந்தியா முழுவதும் கடும் எதிப்பு கிளம்பியுள்ள நிலையில். சினிமா துறையில் நடிகர் சூர்யாவுக்கு நெருக்கமான ஒருவர் சமீபத்தில் சூர்யாவை தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்துள்ளது சூர்யா குடும்பத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்வது, இந்துக்கள் மனம் புண்படும்படி பேசுவது, என இது போன்ற சர்ச்சைக்குரிய வகையில் பேசி தங்கள் புதிய படங்களுக்கு விளம்பரம் தேடி வருவதாக சூர்யா மற்றும் ஜோதிகா மீது மக்கள் மத்தியில் குற்றசாட்டுகள் இருந்து வருகிறது. இந்நிலையில் இவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது, சர்ச்சைக்குரிய வகையில் சினிமாவில் காட்சிகள் வைப்பது போன்றவை இவர்கள் படத்துக்கு விளம்பரம் பெற்று தந்தாலும்.

இவர்களுக்கு அதுவே எதிராகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் சூர்யாவை தொடர்புகொண்ட சினிமா துறையை சேர்த்த அவருக்கு நெருக்கமானவர் தற்போது உள்ள சுழலில் நீங்கள் உங்கள் குடும்பத்தினர் மிக கவனமாக நடந்து கொள்ளுங்கள். நீங்கள் தெரிவிக்கும் கருத்து தமிழக்தில் ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும் அந்த கருத்து பிற மாநில மக்களிடம் செற்றாடையும் போது அது உங்களுக்கு மிக பெரிய எதிர்ப்பாக அமைகிறது.

தெலுங்கு, மலையாளம் பகுதிகளில் உங்களுக்கு உள்ள மார்க்கெட்டை அது பாதிப்பை உண்டாகும், மேலும் நீங்களும் உங்க குடும்பத்தினரும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவதால் உங்களுக்கு எதிரானவர்கள் உங்களின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அடுத்து சர்ச்சைக்குரிய வகையில் எப்போது நீங்கள் கருத்து தெரிவிப்பீர்கள் அதை இந்தியா முழுவதும் எடுத்து சென்று நடிகர் சித்தார்த்துக்கு நடந்தது போன்று உங்களுக்கு மிக எதிப்புகள் உருவாக்கலாம்.

அது உங்கள் சினிமா வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து விடும் என்றும், சுமார் 10 படங்கள் தொடர்ந்து தோல்வி படங்களை மட்டும் கொடுத்து வந்த நீங்கள் கடைசியாக உங்கள் நடிப்பில் வெளிவந்த இரண்டு படங்கள் பொருளாதார ரீதியில் வெற்றி பெற்றுள்ளது. அதை தக்க வைத்து கொள்ளுங்கள். இல்லை என்றால் நடிகர் சித்தார்த் போன்று சினிமாவில் காணாமல் போய்விடுவீர்ர்கள் என நெருக்கமானவர்களால் சூர்யாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அறிவாலயம் பக்கமே வர கூடாது.. சுந்தரவல்லி விரட்டியடிப்பா. கதறும் பிரசன்னா கண்டுகொள்ளாத திமுக ..