பிரபல நடிகையுடன் கணவர் அஜால் குஜால்… என் வாழ்க்கையே போச்சு… தேம்பி தேம்பி அழும் சானியா மிர்ஷா.!

0
Follow on Google News

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தன்னுடைய திறமையான விளையாட்டின் மூலம் இந்திய டென்னிஸ் நட்சத்திரமாக வலம் வந்தவர். மேலும் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் திகழ்ந்தவர் சானியா மிர்சா.ஏற்கனவே திருமணம் முடிந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சயிப் மாலிக் உடன் ஏற்பட்ட நெருக்கம் அதிகரித்ததை தொடர்ந்து இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது.

சானியா மிர்சாவை காதலிக்க தொடங்கிய அடுத்த சில மாதங்களில் முதல் மனைவி ஆயிஷாவை விவாகரத்து செய்து கொண்ட சயிப் மாலிக் உடனே 2010 ஆம் ஆண்டு சானியா மிர்சாவை திருமணம் செய்தார் சயிப் மாலிக், திருமணத்திற்கு பின்பு பாக்கிஸ்தானில் கணவர் சயிப் மாலிக் உடன் செட்டில் ஆனார் சானியா மிர்சா, இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

சயிப் மாலிக் மற்றும் சானியா மிர்சா இருவரும் துபாயில் தொழில் ரீதியாக பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதால். குடும்பத்துடன் துபாயில் செட்டிலாக தொடங்கினார்கள், அவ்வப்போது பாக்கிஸ்தான் சென்று வந்தனர். எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக சென்ற இவர்களின் இல்லற வாழ்க்கையில் பிரபல பாக்கிஸ்தான் நடிகை ஆயிஷா ஓமர் என்பவருடன் கடந்த 2021 ஆம் ஆண்டு போட்டோ சூட்டில் சயிப் மாலிக் நடித்தார்.

அப்போது இருந்தே சயீப் மாலிக் மற்றும் ஆயிஷா ஒமர் ஆகிய இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இவர்களின் நெருக்கம் அதிகரிக்க தொடங்கியது. இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவது, மேலும் வெளிநாடுகளில் பாகிஸ்தான் நடிகை ஆயிஷா ஒமருடன் கிரிக்கெட் வீரர் சயிப் மாலிக் அஜால் குஜாலாக இருப்பதாக பாக்கிஸ்தானில் வெளியாகும் ஊடகங்கள் கிசு கிசுக்களை வெளியிட்டனர்.மேலும் பாகிஸ்தான் நடிகையுடன் கணவர் சயிப் மாலிக் அஜால் குஜாலாக இருக்கும் தகவல் மனைவி சானியா மிர்சாவுக்கு தெரிய வந்துள்ளது.

இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமண வாழ்க்கையில் விரிசலுக்கு வழிவகுத்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும் நடிகை ஆயிஷா ஒமரை விட்டு விலக மனமில்லாமல் தொடர்ந்து அவருடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார் சயிப் மாலிக். இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த சானியா மிர்சா அவருக்கு நெருக்கமானவர்களிடம் என் வாழ்க்கையே போச்சு, என தேம்பித் தேம்பி அழுதுள்ளார்.

சானியா மீர்சா தன்னுடைய சோகத்தை வெளிப்படுத்தும் விதத்தில் சமீபத்தில் அவருடைய சமூக வலைதள பக்கத்தில், “உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன, அல்லாவை கண்டுபிடிக்க” என்று பதிவு செய்திருந்தார். மேலும் கணவர் சயிப் மாலிக்கை விவாகரத்து செய்து விட்டு மகனுடன் தனியாக துபாயில் வாசிக்க முடிவு செய்த சானியா மிர்சா, வழக்கறிஞர் மூலம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து சானியா மிர்சா – சயிப் மாலிக் விவகாரத்து செய்ய இருப்பதாக பாக்கிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டனர். இதனால் இவர்கள் விவாகரத்து காரணமான பாக்கிஸ்தான் நடிகை ஆயிஷா ஓமரை அந்நாட்டு ரசிகர்கள் திட்டி தீர்த்து வந்தனர். மேலும் இந்த விவகாரம் நடிகை ஆயிஷாவுக்கு மிக பெரிய அவப்பெயரை பாக்கிஸ்தான் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தன்னுடைய இமேஜை காப்பாற்றி கொள்ள சயீப் மாலிக்கை விட்டு நிரந்தரமாக விலகியுள்ளார் நடிகை ஆயிஷா ஒமர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆயிஷா ஒமர் தன்னை கழட்டிவிட்டு சென்ற பின்பு மீண்டும் மனைவி சானியா மிர்சாவுடன் இணைந்து வாழ்வதற்கு சயிப் மாலிக் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு சானியா மிர்சா ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இருந்தும் இருவரையும் மீண்டும் இணைத்து வைப்பதற்கான முயற்சியில் அவர்களின் நெருக்கமான வட்டாரங்கள் மற்றும் குடும்பத்தினரும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.