சில்க் சுமிதா தற்கொலைக்கு காரணமான அந்த ஆண் நண்பர் யார் தெரியுமா.?இறுதியில் கடனாளியாக ஏமாற்றப்பட்ட சில்க்.!

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை சில்க் சுமிதா, அவர் நடித்த கால கட்டத்தில், ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கு இனையாக தனக்கென ஒரு ரசிகர்களை தனது கவர்ச்சி பார்வையிலாலும், நடிப்பினாலும் கட்டி போட்டு வைத்திருந்தார், 80, 90 களில் வெளியான முக்கிய திரைப்படங்களில் சில்க் ஆட்டம் போட்ட ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும், அந்த ஒரு பாடலை பார்க்கவே திரையரங்குகளில் கூட்டம் அலைமோதும்.

பொது நிகழ்ச்சிகளில் தான் வருவது தெரிந்தால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்பதை அறிந்த சில்க் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளார்.அவர் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்ததால் மிகவும் கஷ்டப்படும் தயாரிப்பாளர்களிடம் கொடுக்கும் பணத்தை பெற்று கொள்வாராம், ஆனால் இவரின் இந்த குணம் அறிந்த சில தயாரிப்பாளர்கள் ஏமாற்றிய சம்பவமும் நடந்துள்ளது. சம்பள பாக்கி விஷயத்தில் எந்த ஒரு காரணத்துக்காகவும் கோவ படமாட்டார் சில்க் என்கிறது சினிமா வட்டாரம்.

இந்நிலையில் சில்க் மர்ம மரணம் குறித்து சினிமா துறையை சேர்ந்த முக்கிய பிரபலம் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது, சில்க் கவர்ச்சியாக நடிக்க வைப்பதில் இயக்குனர் பாலு மஹேந்திரா அத்து மீறி நடந்து கொண்டதாகவும், ஆனால் சில்க் எந்த உடை அணிந்தும் நடிக்க மறுப்பதில்லை, இயக்குனர் நடிக்க சொல்லும்படி அப்படியே நடிப்பவர் தான் சில்க் என்றும், அதனால் கவர்ச்சி காட்டுவது பற்றி அவர் கவலை பட்டது கிடையாது.

ஆந்திராவை சேர்ந்த ஒரு மருத்துவருடன் தனது இறுதி காலத்தில் ஒன்றாக வாழ்ந்து வந்த சில்க் அவர் கேட்கும் பணத்தை வாரி இறைத்துள்ளார், மேலும் தான் கேட்க கேட்க பணம் தரும் வகையில் அந்த மருத்துவர் சில்க் அவர்களுக்கு போதை ஊசியை பயன்படுத்த கற்று கொடுத்துள்ளார் இதனால் சில்க் போதையில் படப்பிடிப்பு தளத்துக்கு கூட வந்துள்ளதாக தெரிவித்த அந்த முக்கிய சினிமா பிரபலம், ஒரு கட்டத்தில் கடனாளியாகவும் ஆகியுள்ளார் சில்க்.

மேலும் சில்க் உடன் வாழ்ந்து வந்த அந்த மருத்துவருக்கு 20 வயது மதிக்க தக்க ஒரு மகன் இருந்துள்ளார் அவர் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருந்ததை அறிந்து ஒவ்வொரு இயக்குனர்களிடமும் சில்க் அந்த பையனை அழைத்து கொண்டு அறிமுகம் செய்துள்ளார், இதனால் சில்க் மீது சந்தேகப்பட்டு தனது மகனுடன் தவறான உறவு இருப்பதாக சில்க் உடன் சண்டையிட்டுள்ளார் அந்த மருத்துவர், ஒரு கட்டத்தில் நாம் அனைவராலும் ஏமாற்றப்படுவதை உணர்ந்த சில்க் சுமிதா இறுதியில் தற்கொலை செய்து கொண்டதாக அவருடன் நட்புடன் இருந்த அந்த சினிமா பிரபலம் தெரிவித்தார்.