ஏ.ஆர்.ரகுமான் தங்கச்சியை ஏமாற்றி கழட்டிவிட்டது யார் தெரியுமா.? பயில்வான் வெளியிட்ட பரபரப்பு தகவல்..

0
Follow on Google News

சினிமா துறையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமா துறையைச் சேர்ந்த நடிகர் மற்றும் நடிகைகள் பற்றி பல ரகசிய தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். சினிமா துறையைச் சார்ந்தவர்கள் யாராவது பயில்வானுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அல்லது விமர்சனம் செய்தால், அவர்களை பற்றி மேலும் பல அந்தரங்க விஷயங்களை வெளியிட்டு நாறடித்து விடுவார் பயில்வான்.

இதனாலேயே பெரும்பாலும் சினிமா துறையில் இருந்து இவருக்கு எதிர்ப்புகள் வருவது கிடையாது. சம்பந்தபட்டவர்கள் பலர் பயில்வானை கண்டும் காணாமல் சென்றுவிடுவார்கள். சமீபத்தில் நடிகைகள் கவர்ச்சி புகைப்படம் வெளியிடுவது குறித்து பயில்வான் பேசியதை சுட்டிக்காட்டி, பிரபல சீரியல் நடிகை ஷர்மிளா மற்றும் வலைப்பேச்சு புகழ் பிஸ்மி இருவரும் பயில்வனை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார்கள்.

அதில் பைல்வான் ஒழுக்கமற்றவர் என்கின்ற வார்த்தைகளையும் பயன்படுத்தி இருந்தார்கள். இவர்கள் இருவருக்கும் பதிலடி கொடுக்கும் விதத்தில் பயில்வான் ரங்கநாதன் பேசியதாவது, நடிகை சர்மிளா ஆரம்ப கட்டத்தில் டாக்டர் மாத்ருபூதம் பங்குபெற்ற செஸ் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்தார். இந்த நிகழ்ச்சி நள்ளிரவில் ஒளிபரப்பாகும். செஸ் குறித்து நேயர்கள் கேட்கும் கேள்விக்கு டாக்டரிடம் கேட்டு விளக்கம் தரக்கூடிய வேலையைத்தான் சர்மிளா செய்து வந்தார்.

அதனால் ஒரு செஸ் நிகழ்ச்சி மூலம் தான் சர்மிளா பிரபலமானார். மேலும் இவருக்கு மூன்று கணவர்கள். முதல் கணவர் தொலைக்காட்சியில் நிர்வாகியாக இருந்த ஒரு பிராமணரை சமூகத்தைச் சேர்ந்த மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்பு அவரை விவாதத்து செய்துவிட்டு இலங்கை தமிழர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார், பின்பு அது என்ன ஆனது என்று தெரியவில்லை.

தற்பொழுது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி என்பவர் குடும்பம் நடத்தி வருகிறார், இப்படி மூன்று கணவரை திருமணம் செய்து கொண்டவர் தான் நடிகை சர்மிளா. சர்மிளா உடன் நானும் சில படங்கள் நடித்து உள்ளேன். ஒருமுறை பொள்ளாச்சியில் நடந்த படப்பிடிப்பில் என்ன நடந்தது என்பதை பற்றி நான் வெளியில் சொல்லவா.? என மிரட்டும் தோணியில் பேசிய பயில்வான், ஆனால் என்னவென்று சொல்லவில்லை.

மேலும் சினிமா விமர்சகர் பிஸ்மி குறித்து கூறுகையில், இவர் பாட்டு புத்தகம் விற்பனை செய்து வந்தவர். இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தங்கச்சியை காதலித்து, திருமணம் செய்து ஏமாற்றி பின்பு கழட்டி விட்டவர் என்றும், பலமுறை சினிமா குறித்து தவறான செய்திகளை தெரிவித்ததற்காக, மூன்று முறை தயாரிப்பாளர் சங்கத்தில் மன்னிப்பு கேட்டவர் பிஸ்மி என்றும் தெரிவித்த ரங்கநாதன்.

பாம்பை சீண்டினால் அது கொத்தாம விடாது, அது போன்று தான் என்னை சீண்டினால் நான் பதிலடி கொடுப்பேன், மூன்று புருஷனை எதற்காக சர்மிளா விரட்டினார் என்று சொல்வாரா, அல்லது அதே போன்று ஏஆர் ரகுமான் தங்கச்சியை எதற்காக கழட்டிவிட்டார் என்று பிஸ்மி சொல்வாரா என்று இருவரின் அந்தரங்க வாழ்க்கையை தோலுரித்து காட்டியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.