சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள இணையத் தொடர் ஒளிபரப்பை நிறுத்தவில்லை என்றால் என்ன நடக்கும் தெரியுமா.? பாரதிராஜா எச்சரிக்கை..!

0
Follow on Google News

அமேசான் OTT தளத்தில் வெளிவந்துள்ள தி பேமிலி மேன் 2 இணையத் தொடர் குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், இயக்குனர் சேரன் , சீமான் போன்றார் தி பேமிலி மேன் 2 இணைய தொடருக்கு எதிராக கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில், இந்த தொடரை மத்திய அமைச்சர் தலையிட்டு உடனே நிறுத்த உத்தரவிட வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார், அவர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது.

எங்கள் இனத்திற்கு எதிரான தி பேமிலி மேன் 2 இணையத் தொடரை நிறுத்த தமிழர்களும், தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய மத்திய அரசு அத் தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மௌனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக்களத்தையும், அவர்களின் வரலாற்றையும் அறியாத தகுதியற்ற நபர்களால், தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன.

அறமும் வீரமும் தன்னலமற்ற ஈகமும் செறிந்த போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடும் தொடரை உருவாக்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இத் தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் மாண்புமிகு திரு.பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிடவேண்டும். இத்தொடரில் தமிழ், முஸ்லீம் , வங்காளி என குறிப்பிட்ட இனமக்களுக்கு எதிரான மன நிலையோடு தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள்.

தி பேமிலி மேன் 2 தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும். எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து OTT தளத்தில் வெளிவந்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன் என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.