விக்னேஷ் சிவன் மீது நம்பிக்கை இல்லை… சைசாக கழண்டு கொண்ட நயன்தாரா… அப்ப அஜித் செய்தது சரி தான்..

0
Follow on Google News

போடா போடி படத்தின் மூலம்தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இவர் 2015ல் விஜய் சேதுபதி- நயன்தாராவை வைத்து எடுத்த நானும் ரவுடிதான் படம் மாபெரும் வெற்றி வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து இவர் எடுத்த தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் எதிர்பார்த்து வெற்றியை கொடுக்கவில்லை. இருப்பினும் துவண்டு போகாத விக்னேஷ் சிவன், அடுத்ததாக நடிகர் அஜித்தை வைத்து படம் எடுக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

அஜித்தும் முதலில் விக்னேஷ் சிவனுக்கு ஓகே சொல்லிவிட்டு பின்னர் சில காரணங்களால் பின் வாங்கி விட்டார். இதனால் அஜித்துடன் விக்னேஷ் சிவன் பண்ண இருந்த படம் டிராப்பானது. இது விக்னேஷ் சிவனுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் வேதனையையும் கொடுத்தது. விக்னேஷ் சிவன் தற்போது அவர் இயக்கும் படத்தில் , கோமாளி, லவ் டுடே படத்தின் மூலம் பிரபலமான இயக்குனரும் நடிகருமான பிரதிப் ரங்க நாதனை ஹீரோவாக நடிக்க வைக்க உள்ளார்.

மேலும் இப்படத்தில் ஹீரோயினாக கீர்த்தி செட்டி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். பல அவமானம், தோல்விகளுக்கு பின்னர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள இப்படத்தில் ஹீரோவின் அக்காவாக நயன்தாரா நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இப்படியான நிலையில், இந்த படத்தின் பூஜை நேற்று விமர்சையாக நடத்தப்பட்டது. விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தின் பூஜையில் அவரது மனைவி நயன்தாரா பங்கேற்கவில்லை.

ஆனால், இப்படத்தின் பூஜையில் பிரதீப், கீர்த்தி செட்டி, அனிருத், எஸ் ஜே சூர்யா, தயாரிப்பாளர் லலித் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பூஜையின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. LIC என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜையில் நயன்தாராவை தவிர எல்லோரும் கலந்து கொண்டதால், நடிகர் அஜித்தை போல நயன்தாராவும் விக்னேஷ் சிவனை நேரம் பார்த்து கழட்டி விட்டாரா என்று இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்

சமீபத்தில்,. நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் ப்ரமோஷனுக்காக பேட்டியில் கலந்து கொண்டு பேசிய நயன்தாரா, கணவரின் அடுத்த படத்திற்கான பூஜையில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அப்படி என்றால், விக்னேஷ் சிவனின் எல்ஐசி படத்தில் நயன்தாரா ஹீரோவின் அக்காவாக நடிக்கவில்லையா? இல்லை விக்னேஷ் சிவனின் கதை பிடிக்கவில்லையா என்றெல்லாம் சோசியல் மீடியாவில் விமர்சனங்கள் வருகின்றன.

நயன்தாரா ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், சூட்டிங் நடக்கும் இடங்களுக்கு எல்லாம் குழந்தைகளை தூக்கிக் கொண்டு பாடிகாட் போல சுற்றி வந்த விக்னேஷ் சிவன், இயக்க உள்ள அடுத்த படத்தின் பூஜையில் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.