நயன்தராவும் சமந்தாவும் இப்போ பாசமான சகோதரிகள்

0
Follow on Google News

பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளாக வலம்வரும் நடிகைகள் ஒன்றாக இணைந்து நடிப்பது அபூர்வம். அப்படியே நடித்தாலும் பிளாஷ்பேக் காட்சிகளில் மட்டுமே வந்து போகிற மாதிரிதான் கதையை அமைத்திருப்பார்கள். இதை உடைத்தெறியும் வகையில் தற்போது முன்னணி கதாநாயகிகள் இருவர் ஒரு படத்தில் இணைந்து நடித்து வருவது ஆச்சர்யமான ஒன்றுதான்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம்தான் அது. இதில் இணைந்து நடித்திருக்கும் அந்த முன்னணி நடிகைகள் நயன்தாராவும், சமந்தாவும்தான். இதில் இருவரும் பாசமான சகோதரிகளாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

படத்தின் தலைப்புக்கேற்ப இருவரும் சேர்ந்து விஜய் சேதுபதி காதலிப்பதுபோல் கதையை அமைத்திருக்கிறார்களாம். இருவரும் அதிக காட்சிகளில் இணைந்து நடிப்பதுபோலவும் உருவாக்கி வருகிறார்களாம். இப்படத்திற்காக இருவரும் ஒரு பேருந்தின் படிக்கட்டில் ஒரே புடவையில் பயணிப்பதுபோல் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.